பள்ளிபாளையம், ஜூன் 19- மின்கட்டண உயர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என விசைத்தறி தொழி லாளர் சங்கம் (சிஐடியு) வலியுறுத்தி உள்ளது. விசைத்தறி தொழிலாளர் சங்க பள்ளிபாளையம் ஒன்றியக்குழுவின் 18 ஆவது மகாசபை சிஐடியு காவேரி ஆர்.எஸ் அலுவலகத்தில், ஒன்றிய தலைவர் ஏ.அசன் தலைமையில் நடை பெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.மோகன் துவக்க உரையாற்றினார். ஒன்றிய செயலாளர் எஸ்.முத்துகுமார் வேலையறிக்கையை முன்வைத்தார். சிஐடியு நாமக்கல் மாவட்ட செயலாளர் ந.வேலுச்சாமி வாழ்த்துரையாற்றினார். இக்கூட்டத்தில், விசைத்தறி தொழிலா ளர்களின் கூலி உயர்வு ஒப்பந்தப்படி, 7 சதவிகித கூலி உயர்வை அனைத்து ரகத்திலும் பணிபுரியும் தொழிலாளர்க ளுக்கு நிர்வாகங்கள் உடனடியாக வழங்க வேண்டும். இரவு நேரங்களில் அனுமதி பெற்ற சாய நிறுவனங்கள் கழிவுநீரை சுத்திக ரிக்காமல், காவிரியாற்றில் கலந்து வரு கின்றன. இதனை தடுத்து நிறுத்த அதி காரிகள் முன்வர வேண்டும். அந்த நிறு வனங்கள் மீது கடுமையான நடவ டிக்கை எடுக்க வேண்டும்.
சுத்திகரிப்பு இயந்திரம் வைத்துள்ளவர்கள் கழிவு நீரை சுத்தப்படுத்தி வெளியேற்றவும், அரசு அறிவித்த பொது சுத்திகரிப்பு நிலையத்தை உடனடியாக அமைத்து, காவிரியாற்றை பாதுகாக்கவும் நடவ டிக்கை எடுக்க வேண்டும். ஜூலை 1 முதல் விசைத்தறி மற்றும் வியாபார நிறுவனங்களுக்கு உயர்த்தவிருக்கும் மின் கட்டணம் உயர்வை திரும்பப்பெற வேண்டும். நாமக்கல், ராசிபுரம் திருச் செங்கோடு மற்றும் ஈரோடு செல்லும் பேருந்துகள் காவேரி ஆர்.எஸ் பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி விட வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் ஒன் றிய தலைவராக ஏ.அசன், செயலாள ராக எஸ்.முத்துக்குமார், பொருளாள ராக பி.முருகேசன், துணைத்தலைவர் களாக எம்.அங்கமுத்து, பி.சதாசிவம், சி.சண்முகசுந்தரம், துணைச்செயலா ளர்களாக கே.குமார், ஏ.அருள்மணி, எம்.ஜெயவேல் உள்ளிட்ட 23 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய் யப்பட்டது. முடிவில், சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம்.அசோகன் நிறைவுரை யாற்றினார்.