உடுமலை, மார்ச் 6- உடுமலை – மூணாறு சாலையில் காட்டுயானைகள் உலா வருவதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட உடுமலை, அமராவதி வனச்சரக பகுதிகளில் யானை, புலி, கரடி, மான், சிறுத்தை, பாம்பு, காட்டுப்பன்றி என ஏராளமான வன விலங்குகள் உள்ளன. தற்போது கோடை காலம் ்துவங்கி யுள்ளதால், வனப்பகுதிகளில் உள்ள நீர் ஆதாரங்களான சிற்றோடைகள் குட்டைகள் வறண்டு காட்சியளிக்கின்றன. கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்நிலை யில், செடி, கொடிகளில் பசுமை இழந்து காய்ந்து வரு கின்றன. இதனால், யானைகள் தங்களது தீவனத் தேவை யைப் பூர்த்தி செய்ய முடியாமல் வனப்பகுதியில் இருந்து இடம்பெயர துவங்கியுள்ளன. யானைகள் உடுமலை - மூணாறு செல்லும் வழித்தடத்தில் சாலையோரம் இருக்கும் பசுமையான முட்செடிகளுக்குள் தஞ்சம் புகுந்துள்ளன. பகல் முழுவதும் சாலையோரம் உலா வரும் யானை களை கண்டு இவ்வழித்தடத்தில் செல்லும் வாகன ஓட்டி கள் அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக, உடுமலை – மூணாறு சாலையில் காமவெள்ளம் ஏழுமையான் கோவில் பிரிவு பகுதியில் யானைகள் உலா வருவதால், வனத்துறையினர் வாகன ஓட்டிகளை எச்சரிக்கையுடன் பயணிக்கும் படி அறிவு றுத்தி வருகின்றனர்.