districts

img

வாழைத்தோட்டத்தை சேதப்படுத்திய காட்டுயானைகள்

ஈரோடு, ஜூலை 15- தாளவாடி அருகே வாழைத்தோட்டத்தை சேதப்படுத்திய காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என  விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வனப் பகுதிகளில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இந்த  வனப்பகுதிகளிலிருந்து உணவு, தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி வெளியேறி வருகிறது. அவ்வப்போது விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதும் தொடர் கிறது. இந்நிலையில், தாளவாடி வனச்சரகத்துக்குட்பட்ட மல் குத்திபுரம் கிராமத்தை சேர்ந்த திருமூர்த்தி (60) என்ற விவ சாயி, தனது 3 ஏக்கர் தோட்டத்தில் வாழை சாகுபடி செய்துள் ளார். இந்நிலையில், வியாழனன்று இரவு 12 மணியளவில் வனப்பகுதியிலிருந்து வந்த கருப்பன் என்ற ஒற்றை காட்டு யானை வாழைத்தோட்டத்துக்குள் புகுந்தது. தொடர்ந்து அந்த யானை அங்கு சாகுபடி செய்யப்பட்ட வாழையை சாப் பிட்டும், மிதித்தும் சேதப்படுத்தியது. இந்த சத்தம் கேட்டு அங்கு வந்த விவசாயி திருமூர்த்தி ஒற்றை காட்டு யானை பயிர் களை சேதாரம் செய்வது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதை யடுத்து வனத்துறைக்கு தகவல் அளித்தார். இதன்பின் அப்பகுதி விவசாயிகள் ஒன்று சேர்ந்து யானையை விரட்டினர். சுமார் 1 மணி நேரத்திக்கு பிறகு யானை  வனப்பகுதிக்கு சென்றது. இதில்,அறுவடைக்கு தயார் நிலை யிலிருந்த 300க்கும் மேற்பட்ட வாழைகள் சேதமானது. கருப் பன் என்ற யானையை விரட்ட 2 கும்கி யானைகள் வனப் பகுதியில் உள்ளது. இந்நிலையில், கும்கி யானை உள்ள பகுதி யிலயே கருப்பன் யானை வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய தோட்டத்தில் புகுந்து சேதம் செய்தது விவசாயி களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, வனத் துறையினர் விரைவில் கும்கி யானை உதவியுடன் கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.