districts

img

தூய்மையான நீரை தேடியலையும் காட்டு யானைகள்

யானைகள் தாகம் தீர்க்க வனப் பகுதிக்குள் கட்டப்பட்டுள்ள தண்ணீர்  தொட்டிகளை முறையாக பராம ரிக்காததால் தூய்மையான நீரைத் தேடி ஊருக்குள் நுழையும் யானை கள் அதிகரித்துள்ளது. காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் தாகம் தீர்க்க ஊரை ஒட்டி யுள்ள வனப்பகுதிக்குள் கூடுதலாக தண்ணீர் தொட்டிகளை கட்ட வேண் டும், ஏற்கனவே வனத்துறையினரால் கட்டப்பட்டு போதிய பராமரிப்பின்றி உள்ள தண்ணீர் தொட்டிகளில் தின சரி சுத்தமான நீரை நிரப்ப நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம், சிறு முகை, காரமடை வனச்சரக பகுதி களில் காட்டு யானைகளின் நடமாட் டம் அதிகம் காணப்படும். தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடக வனப் பகுதிகளை இணைக்கும் வழித்தடப் பாதை இவ்வனப்பகுதியில் உள்ள தால் வலசை செல்லும் யானைக் கூட்டங்கள் கடந்து செல்வது வழக் கம். வலசை செல்லும் யானைகள் தங்களது தண்ணீர் தேவைக்காக காட்டை ஒட்டியுள்ள கிராமங்களுக் குள் புகுவதை தடுக்கும் நோக்கில் வனத்தினுள் ஆங்காங்கே சுமார்  32 இடங்களில் தண்ணீர் தொட்டி கள் கட்டப்பட்டுள்ளன.

இந்த தொட்டி யில் இருக்கும் நீரை அருந்தும் யானைகள் அமைதியாக கடந்து  சென்று விடுகின்றன. ஆனால்,  அண்மை காலமாக இவ்வனச்சரகங் ளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பெரும்பாலான தொட்டிகள் போதிய  பராமரிப்பின்றி பயனற்று கிடக்கின் றன. பல இடங்களில் தொட்டிகளில் நீர் நிரப்ப பயன்படுத்தும் மோட்டார் கள் பழுதாகி கிடப்பதால் தண்ணீர்  நிரப்பும் பணிகள் நடைபெறுவ தில்லை. சில தொட்டிகளை ஆண்டுக் கணக்கில் சுத்தப்படுத்தாமல் இருப்ப தால் அதில் உள்ள நீர் அசுத்தமாக, பச்சை பசேலென பாசிகள் நிரம்பி காணப்படுகின்றன. யானைகள் சுத் தமான நீரை மட்டுமே அருந்தும் இயல்புடையவை என்பதால் இந் நீரை அவை அருந்துவதில்லை. காட் டுக்குள் இயற்கையாய் அமைந் துள்ள வனக்குட்டைகளில் மான்கள், காட்டெருதுகள், காட்டுப்பன்றிகள், செந்நாய்கள்  போன்ற பிற வன விலங்குகள் நீர் அருந்தி செல்லும் போது அவற்றின் உமிழ் நீர் மற்றும் சிறுநீர் கலப்பதால் குட்டை நீரை முற் றிலும் தவிர்த்து விட்டு தூய்மையான நீரை தேடி தொட்டிகளையே நம்பி யானைகள் வருகின்றன.

ஆனால் தொட்டிகளிலும் தண்ணீர் இல்லை அல்லது இருக்கும் நீர் அசுத்தமாக இருப்பதால் சுத்தமான தண்ணீர் தேடிய லையும் யானைகள் தாகத்தோடு அரு கில் உள்ள ஊர்களுக்குள் புகுந்து  விடும் பரிதாப சூழலுக்கு தள்ளப்படு கின்றன. இந்நிலை தொடர்ந்தால் வரும் கோடை காலத்தில் யானை-மனித மோதல்கள் மேலும் பல மடங்கு அதி கரித்து பிரச்சனையின் தீவிரம் கட் டுக்கடங்காமல் போகும் என எச்ச ரிக்கின்றனர் வன உயிரின ஆர்வலர் கள். இதனை தடுக்கும் வகையில் வனத்திற்குள் கட்டப்பட்டுள்ள தண் ணீர் தொட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், இருக்கும் தொட்டிகளை சரியாக பராமரித்து அதில் தினசரி இரு முறை தூய்மை யான நீர் நிரப்பபடுவதை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். இரா.சரவணபாபு, மேட்டுப்பாளையம்