அவிநாசி, பிப்.28- அவிநாசி அருகே தேவராய பாளையத்தில் ஞாயிறன்று நலவாரிய பதிவு சிறப்பு முகாமில் பதிவு செய்தவர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கப்பட்டது. அவிநாசி ஒன்றியம் சிஐடியு கட்டிட கட்டுமான தொழி லாளர் சங்க சார்பில் தொடர்ச்சியாக சுமார் 8 மாதத்திற்கு மேலாக சிறப்பு நலவாரிய பதிவு முகாம் நடைபெற்று வருகி றது. இந்நிலையில் திருமுருகன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட தேவராய பாளையத்தில் சிறப்பு நலவாரிய முகாம் நடத் தப்பட்டது. இதில் பதிவு செய்த பொதுமக்களுக்கு சிஐடியு கட்டிட கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் ரமேஷ் நலவா ரிய அடையாள அட்டையை வழங்கினர். இதில் கட்டிட கட்டுமான சங்க ஒன்றிய நிர்வாகிகள் ராஜ், கனகராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரமன்ற உறுப்பினர் சுப்பிர மணியம், ஒன்றியக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணி மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.