கோவை, ஆக.19- தமிழ்நாட்டை புத்தொழில் நிறுவனங்க ளுக்கு ஏற்ற மாநிலமாக மாற்றுவோம் என கோவையில் நடைபெற்ற ஸ்டார்ட் அப் திரு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரி வித்தார். கோவை கொடிசியா அரங்கில் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திருவிழா நடைபெறுகிறது. இதில் 450 அரங்குகள் அமைக்கப்பட்டுள் ளன. அதில், 100 பெண் தொழில் முனைவோர் களின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமான புதிய தொழில்நுட்ப கண்டு பிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விழாவை தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார். அப் போது அவர் பேசுகையில், இத்திருவிழா அனைத்து மண்டலங்களிலும் நடத்தப்படும். புதிய படைப்புகள் உருவாக்குவதில் கடைசி இடத்தில் இருந்து 3 ஆவது இடத்திற்கு தமிழ் நாடு முன்னேறி உள்ளது. இந்த 2 ஆண்டுக ளில் மட்டும் 8 லட்சத்து 98 ஆயிரம் பேருக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் 5 மண்டலமாக பிரித்து ஸ்டார்ட் அப் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கோவை யில் 4 தொழிற்பேட்டைகளுக்கான பணி கள் நடைபெற்று வருகிறது, என்றார். இதைத்தொடர்ந்து, தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச் சர் டி.ஆர்.பி.ராஜா பேசுகையில், இந்தி யாவே வியந்து பார்க்கும் வளர்ச்சியை தமிழ் நாடு பெற்றுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பதிவு 3 மடங்கு அதிகரித்துள்ளது. தமிழ்நாடு பல் வேறு துறைகளிலும் முதலிடத்தில் இருக்க கோவை முக்கிய பங்கு வகிக்கிறது, என்றார். 68 சதவிகித மின்சார இரு சக்கர வாகன விற்பனையில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. முதல்வர் பயணத் தில் மருத்துவ கருவி (Medical device) தொடர் பாக ஜப்பானில் கையெழுத்து இடப்பட்ட 2 மாதத்தில் பணிகள் தொடங்கி விட்டோம், என்றார்.
கோவையில் தொழில்நுட்ப ஜவுளி பூங்கா (Technical textile) விரைவில் வளர போகிறது, என்றார். இவ்விழாவில் காணொளி வாயிலாகவே சென்னையில் இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு தொழிலை மேம்படுத்திய வர் கலைஞர். கோவை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்பதால் இந்த நிகழ்வை அங்கே நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டேன். அனைவரையும் உள்ளடக்கிய நிலையான வளர்ச்சியை நோக்கி பல்வேறு செயல் திட்டங்கள் செயல்படுத்தபடுகின்றது. 2300 ஸ்டார்ட் அப் தொழில் நிறுவனங்கள் மட் டும் பதிவு செய்து இருந்த நிலையில், ஆட் சிக்கு வந்த இரு வருடங்களில் மூன்று மடங் காக உயர்ந்துள்ளது. இதுவரை 109 நிறுவ னங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் ரூ.10 கோடி வரை ஆதார நிதி வழங்கப்பட்டுள் ளது. தமிழகத்தை புத்தொழில் நிறுவனங்க ளுக்கு ஏற்ற மாநிலமாக மாற்றுவோம், என் றார். முன்னதாக, ரூ.3 கோடி நிதி ஆதாரம் புத்தொழில் முனைவோருக்கு நிதியுதவிய ளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க இயக் குநர் சிவராஜா ராமநாதன், தமிழ்நாடு குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் செய லாளர் அருண்ராய், மாவட்ட ஆட்சியர் கிராந் திகுமார், மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாந கராட்சி ஆணையர் பிரதாப், துணைமேயர் வெற்றிச்செல்வன், நடிகர் சூரி ஆகியோர் கலந்து கொண்டனர்.