தனித்திறமையோடுதான் பிறந்துள்ளோம் இயக்குநர் பொன்வண்ணன் பேச்சு
உதகை, அக்.22- தனித்திறமையோடுதான் பிறந்துள்ளோம் என உதகை யில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் திரைப்பட இயக்குநரும், நடிகருமான பொன்வண்ணன் பேசினார். நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் புத்தகத் திருவிழா நடைபெற்று வரு கிறது. இதில் பல்வேறு தலைப்புகளில் நிகழ்ச்சிகள் நடை பெற்று வருகின்றன. சனியன்று நடைபெற்ற இரண்டாம் நாள் நிகழ்வில் திரைப்பட இயக்குநரும், நடிகருமான பொன் வண்ணன் பங்கேற்று ‘எழுத்தாய் மலர்வோம்’ என்ற தலைப்பில் பேசுகையில், பிறக்கும்போதே ஒவ்வொரு வரும் தனித்திறமைகளோடு பிறந்துள்ளோம். உங்களது தனித்திறமைகளை அடையாளம் கண்டு அதை தற்போதி லிருந்தே மேம்படுத்திக் கொள்ள வேண்டும். பேச்சுத்திறன், நடனம், பாடும் திறன், ஓவியம் வரையும் திறன் உள்ளிட்ட எந்தவொரு திறமை இருந்தாலும், கிடைக்கும் மேடைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆரம்பப்பள்ளியில் தங்கள் தனித்திறமையை வெளிப் படுத்தி, உயர்நிலைப்பள்ளிகளில் உங்கள் திறமைகளை காட்டி பாராட்டு பெற வேண்டும். நீங்கள் எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தாலும், வாசிப்புப் பழக்கத்தை இப்போதி லிருந்தே தொடங்க வேண்டும். அனைத்து வகையான புத்த கங்களும் கிடைக்கும் ஒரே இடம் புத்தகத் திருவிழாதான். இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்றார். முன்னதாக, பெத்லகேம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவியா் நடத்திய மனித நேயப் பாடல், வில்லுப்பாட்டு, கிராமிய நடனம், கரகாட்டம் மற்றும் கோத்த கிரி மக்களின் கலாசார நடன கலை நிகழ்ச்சிகளை பொது மக்கள், சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட அனைவரும் கண்டு ரசித்தனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ரா.கீர்த்தி பிரியதர்சினி, குன்னூர் கோட்டாட்சியர் பூஷணகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தனப்பிரியா, பள்ளி மாணவ, மாணவியர், பொதுமக்கள் பங்கேற்றனர்.
நீதிமன்றம் அருகே பெண்கள் மோதல்: வீடியோ வைரல்
கோவை, அக்.22- கோவை நீதிமன்றம் அருகே இரு பெண்கள் தாக்கிக் கொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. கோவை, கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் சிந்து (26). இவருக்கு கரூர் மாவட்டம், நல்லிபாளையத்தைச் சோ்ந்த திரைப்பட தயாரிப்பாளர் பார்த்திபன் என்பவர் கடந்த 2022-ஆம் ஆண்டு அறிமுகமாகியுள்ளார். இவர், மனைவி உமாவைப் பிரிந்து பெற்றோருடன் வசித்து வருவதாகவும், மனைவி தன்னை மிரட்டி பணம் பறித்து வருவதாகவும் சிந்து விடம் கூறியதாகத் தெரிகிறது. இதனிடையே, சிந்துவை சந்தித்த உமா, பார்த்திபனை மிரட்டி பணம் பறிக்கக் கூறியதாகவும், அதற்கு சிந்து மறுத்த தால் ரவுடிகளை சிந்து வீட்டுக்கு அனுப்பி உமாவிற்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சிந்து அளித்தப் புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசா ரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிந்துவும், திரைப்படத் தயாரிப்பாளர் பார்த்திபனும் கோவை நீதிமன்ற பின்புற வாசல் பகுதி யில் உள்ள வழக்குரைஞர் ஒருவரை சந்திப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது, அங்கு முகக் கவசம் அணிந்து வந்த உமா, பார்த்திபன் வந்திருந்த இருசக்கர வாகனத்தின் சாவியை திடீரென பறித்துள்ளார். இதற்கு சிந்து ஆட்சேபம் தெரிவித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஆத்திரமடைந்த இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இத்தகவலறிந்த பந்தயசாலை போலீசார் சம்பவ இடத் துக்கு வந்து தடுக்க முயன்றனர். இருப்பினும் தாக்குதல் தொடர்ந்தது. இதையடுத்து, இருவரையும் பந்தயசாலை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீசார், இரு வரிடமும் புகார்களைப் பெற்று வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இரண்டு பெண் களும் தாக்கிக் கொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங் களில் பரவி வருகின்றன.
ரூ.77 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
தாராபுரம், அக்.22- மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ. 77 லட்சத் துக்கு பருத்தி ஏலம் போனது. இதுகுறித்து, திருப்பூர் மாவட்டம், மூலனூர் ஒழுங்கு முறை விற்பனைகூட முதுநிலை செயலாளர் சுரேஷ்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, மூல னூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கருர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த 350 விவசாயிகள் பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். அதேபோல் பருத்தியை கொள்முதல் செய்ய திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள் மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர். அதிக பட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.7 ஆயிரத்து 595-ம், குறைந்தபட்ச விலையாக ரூ. 6 ஆயிரத்து 500 ம், சராசரி விலையாக ரூ. 6 ஆயிரத்து 900க்கும் விலை போனது. மொத்தம் 3646 மூட்டைகள் 1 ஆயிரத்து 151 குவிண்டால் பருத்தி ரூ. 77 லட்சத்து 16 ஆயிரத்து 153 க்கு விற்பனையானது என தெரிவித்துள்ளார்.
சாலையில் சாகசம் நிகழ்த்திய மதுப்பிரியர்
கோவை, அக்.22- சாலையில் இருசக்கர வாகனத்தில் சாசகம் நிகழ்த்திய மதுப்பிரியர் குறித்த காணொளி காட்சி சமூக வலைதளங் களில் பரவி வருகிறது. கோவை, சூலூரில் இருந்து உக்கடத்திற்கு திருச்சி சாலை வழியாக பேருந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது பேருந்து முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தை கடந்து செல்ல வேண்டும் என்பதற்காக ஓட்டுநர் ஒலி எழுப்பி யுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருசக்கர வாகனத்தில் சென்ற மதுப்பிரியர், பேருந்தை முன்னே செல்ல விடாமல் குறுக்கும், மறுக்குமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி சாகசம் செய்தார். ஒரு கட்டத்தில் பேருந்தின் வலது புறம் சென்ற மது பிரியர் இருசக்கர வாகனத்தோடு கீழே விழுந்தார். இதனைப் பேருந்தில் பயணி, வீடியோவாக பதிவு செய்து சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ பரவி வருகிறது.
பென்னாகரம்: பட்டாசு குடோன் வெடி விபத்து
தருமபுரி, அக்.22- பென்னாகரம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூ ராட்சி, கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் லட்சுமணன் (50), எம்.கே.நகரில் பேரூராட்சி வளமீட்பு பூங்கா அருகில் தனக்கு சொந்தமான நிலத்தில் சிறிய அளவிலான பட்டாசு குடோன் நடத்தி வருகி றார். இந்நிலையில், ஞாயிறன்று அதிகாலை இந்த பட்டாசு குடோனில் வெடி விபத்து ஏற் பட்டது. இதுகுறித்து அருகிலிருந்தவர்கள் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை யினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் உடனடியாக விரைந்து வந்த நிலைய அலுவலர் செல்வம் தலைமையிலான தீய ணைப்புத்துறையினர் தண்ணீர் அடித்து தீயை அணைத்தனர். இந்த வெடி விபத்தில் பட் டாசு குடோன் தரை மட்டமானது. அதிகாலை நேரம் என்பதாலும், ஊருக்கு சற்று ஒதுக்கு புறம் பட்டாசு குடோன் இருந்ததாலும் பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை. வெடி விபத்து குறித்து தகவலறிந்து வந்த பென் னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் மகாலட்சுமி, ஆய்வாளர் முத்தமிழ் செல்வன், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலர் மகாலிங்க மூர்த்தி மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்தில் வெடி விபத்து குறித்து விசாரணை மேற்கொண்ட னர். முதற்கட்ட விசாரணையில், சமீப கால மாக பட்டாசு குடோன் செயல்படாமல் இருந் துள்ளது என்பதும், இந்த குடோனில் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு போலீசாரால் கைப்பற்றபட்ட வெடி பொருட்கள் குறித் தான வழக்கு பென்னாகரம் நீதிமன்றத்தில் நடந்து வருவதும் தெரிய வந்துள்ளது. வெடி விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து பென்னாகரம் போலீசார் தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
உடற்தகுதி தேர்விற்கு பயிற்சி: ஈரோடு ஆட்சியர் அழைப்பு
ஈரோடு, அக்.22- சார்பு ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வில் வென்றவர்களுக்கு ஈரோட்டில் உடல் தகுதி பெற பயிற்சி அளிக்கப்படுகி றது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் சார்பு ஆய்வாளர் பணிகளுக் கான எழுத்துத்தேர்வு முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளது. இத்தேர்வில் வெற்றி பெற்ற வர்கள் அடுத்த கட்டமாக உடல் திறன் தேர் விற்கு தயாராக வேண்டும். அவர்களுக்கு உத வும் வகையில் ஈரோடு, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக இலவச உடற்தகுதி தேர்விற்கான பயிற்சி ஈரோடு சிஎன்சி கல்லூரி வளாகத்தில் அக்.30 ஆம் தேதி மாலை 4 மணியளவில் தொடங்கப்படவுள்ளது. இப்ப யிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்ப மும், தகுதியும் உள்ள நபர்கள் 0424-2275860, 9842404508 என்ற எண்கள் அல்லது https://forms.gle/B6znDx46KAdEpRyR6 என்ற இணையதளம் வாயிலாக தொடர்பு கொண்டு தங்களது விவரங்களை முன்பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சி யர் ராஜகோபால் சுன்கார தெரிவித்துள்ளார்.
போலி சான்றிதழ் தயார் செய்து ரூ.35 லட்சம் மோசடி பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
சேலம், அக்.22- வருமான வரித்துறையில் வேலை வாங்கி கொடுத்ததுபோல், போலியான சான்றிதழ் தயார் செய்து ரூ.35 லட்சம் மோசடி செய்த பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர் வலியுறுத்தியுள்ளார். சேலம் மாவட்டம், மேச்சேரி பகுதியைச் சேர்ந்த ராஜி என்பவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் சந்திரமோகன் பட்டப்படிப்பு முடித்துவிட்டு பணி தேடிக்கொண்டிருந்தார். இந்நிலையில், பாஜக பிரமுகர் கமலக்கண்ணன் என்பவர் வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டு அறிவிப்பு வந்துள்ளது. அதில் தேர்வு எழுதினால் மட்டும்போதும் வேலை கிடைத்துவிடும் எனக்கூறியுள்ளார். மேலும், இதற்கான அவர் ராஜியிடம் ரூ.35 லட்சம் பணம் பெற்றுள்ளார். தேர்வு எழுத அழைத்து செல்வதாக தில்லிக்கு விமானம் மூலமாக சந்திரமோகனை அழைத்துச் சென்று தேர்வு, படிப்பு ஆவணங்கள் சரிபார்ப்பு, உடல் மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவைகளை தில்லியில் போலியாக நடத்தியுள்ளனர். இதன்பின் நேர்முகத்தேர்வு நடத்த இருப்பதால் பணம் கொடுத்தால், தேர்வு செய்து விடுவார்கள் என்று கூறி ரூ.35 லட்சத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளார். இதையடுத்து வருமான வரித்துறையில் வேலை கிடைத்தது போன்று போலியான ஆவணத்தை தயார் செய்து சந்திரமோகனிடம் கொடுத்துள்ளனர். இதை எடுத்துச் சென்று பரிசோதித்துப் பார்த்தபோது போலியான ஆவணம் என்று தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ராஜி நேரில் சென்று அவரிடம் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. எனவே, பாஜக நிர்வாகி மீது உரிய நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டு தர வேண்டும் என சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ராஜி புகார் அளித்துள்ளார்.
தொடர் விடுமுறை: அலைமோதும் பயணிகள்
சேலம், அக்.22- ஆயுதபூஜை திங்களன்று (இன்று) கொண்டாடப்பட உள் ளது. அதற்கு முந்தைய நாட்களான சனி மற்றும் ஞாயிற் றுக்கிழமைகளும் விடுமுறை நாட்கள் என்பதால் மொத்தம் 4 நாட்கள் தொடர் விடுமுறை வந்துள்ளது. பொதுவாக ஆயுத பூஜை தொடர் விடுமுறை நாட்களில் சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் பேருந்துகள், ரயில்களில் மக்கள் கூட்டம் ஏராளமாக இருக் கும். அந்த வகையில் ஆயுதபூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு சேலத்தில் தங்கி பணிபுரியும் வெளியூர் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் பேருந்துகள், ரயில்களில் வழக்கத்தைவிட கூட்டம் அலை மோதியது. இதனிடையே ஆயுதபூஜையை முன்னிட்டு சேலம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தன. அதன்படி, சனி யன்று முதல் சேலத்தில் இருந்து முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. குறிப்பாக, சேலம் புதிய பேருந்து நிலையத்தில் சனியன்று மாலை 4 மணி முதல் இரவு வரையிலும் பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருப்பூர், ஈரோடு, வேலூர், திருவண்ணாமலை, ஓசூ ருக்கு சென்ற பேருந்துகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஒரு சில பயணிகள் பேருந்தில் இருக்கை கிடைக் காவிட்டாலும் எப்படியாவது ஊருக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் நின்று கொண்டு பயணம் செய்தனர். இதேபோல் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து ரயில்கள் மூலம் மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு பயணித்தனர். சேலம் வழியாக தென் மாவட்டங்களுக்கும், கோவைக்கு சென்ற ரயில்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. அதிலும் ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிகள் முண்டியடித்து கொண்டு ஏறி பயணித்தனர்.
நவ.22 ஆம் தேதியன்று சேலம் புத்தகத் திருவிழா துவக்கம்
சேலம், அக்.22- சேலம் மாவட்டத்தில் நவ.22 ஆம் தேதியன்று துவங்கும் புத்தகத் திருவிழா டிச.3 ஆம் தேதியன்று வரை 12 நாட்கள் நடைபெறவுள்ளது என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகை யில், தமிழ்நாடு அரசு சார்பில் மாவட் டங்களில் புதிய நூலகங்கள் அமைத் தல், அனைத்து மாவட்டங்களிலும் புத் தகத் திருவிழா நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில், கடந்தாண்டு சேலம் மாவட்டத்தில் நடத்தப்பட்ட புத்தகத் திருவிழா பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், புத்தக ஆர்வலர்கள் மற் றும் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரிடையே மிகுந்த வரவேற் பையும், பாராட்டையும் பெற்றது. அதேபோன்று இந்த ஆண்டு சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், சேலம் புத்தகத் திருவிழா - 2023 வரும் நவ.22 ஆம் தேதியன்று தொடங்கி டிச.3 ஆம் தேதியன்று வரை 12 நாட்கள் நடைபெற உள்ளது. சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சித் திடலில் நடைபெற வுள்ள இப்புத்தகக் கண்காட்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பயன்பெறவும், கலை மற்றும் இலக்கியம் நிகழ்ச்சிகள் நடத் திடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்புத்தகக் கண்காட்சியில் சேலம் மாவட்ட பண்பாடு, கலாச்சாரம் சார்ந்த கலை நிகழ்ச்சிகள் நடத்திடவும், மாணவர்களுக்கு பயன்படும் மின் நூல் மற்றும் மின் பொருண்மை பதிப் பாளார்களின் படைப்புகளைக் கொண்ட விற்பனையகங்கள் அமைத் திடவும், அரிய வகை புத்தகங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. மேலும், நூல் விற்பனையகங்கள் அனைத் தும் புத்தகக் கண்காட்சிக்கு வருபவர் கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் அதன் கருப்பொருள் அடிப் படையில் வரிசைப்படுத்தி அமையும் வகையில் அரங்குகள் அமைத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 200க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படவுள்ளது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
பட்டுக்கூடு ஏலம்
தருமபுரி, அக்.22- தருமபுரியில் பட்டு வளர்ச் சித்துறை சார்பில் செயல் பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு சனியன்று 836 கிலோ பட்டுக்கூடு கொண்டு வரப்பட்டன. இதில் ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்ச மாக ரூ.555க்கும், குறைந்த பட்சமாக ரூ.330க்கும், சராசரி யாக ரூ.463.53க்கும் விற்ப னையானது. மொத்தம் ரூ.3 லட்சத்து 87 ஆயிரத்து 718க்கு ஏலம் நடைபெற்றது.