கோவை, டிச.15- குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்களுக்கு கடந்த 9 மாதங் களாக அகவிலைப்படி நிறுத்தி வைத்திருப் பதை கண்டித்து, தமிழ்நாடு குடிநீர் வடி கால் வாரிய ஓய்வூதியர்கள் சங்கத்தினர் (சிஐடியு) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவ லகம் முன்பு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர்கள் சங்கத்தினர் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், குடிநீர் வடிகால் வாரியத்தில் பணி புரிந்து ஓய்வுபெற்றவர்களுக்கு கடந்த 9 மாதங்களாக அகவிலைப்படி நிறுத்தி வைக் கப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களாக அக விலைப்படி உயர்த்தப்படவில்லை. இதனை கண்டித்தும், உடனடியாக அகவிலைப் படியை வழங்க வேண்டும். கோவையை பொறுத்தவரை சிறுவாணி உட்பட ஏகப் பட்ட குடிநீர் திட்டங்களை நிறைவேற்றப் பட்டுள்ளது. இப்போது கோவையில் குடி நீர் பஞ்சமே இல்லாத நிலை உருவாக்கி யுள்ளோம். ஆனால், எங்களுக்கு ஓய்வூதிய அகவிலைப்படி வழங்கப்படவில்லை. தமிழகம் முழுவதும் 9 ஆயிரம் பேர் குடிநீர் வடிகால் வாரியத்தில் பணபுரிந்து ஓய்வு பெற்றுள்ளனர். இதில் 4 ஆயிரம் பேர் அடிப்படை ஊழியர்களாக பணிபுரிந்த வர்கள். எனவே, தமிழக அரசு உடனடியாக நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. முன்னதாக, போராட்ட நோக்கம் குறித்து சங்கத்தின் தலைவர் இளங்கோ உரையாற் றினார். இதில், ஓய்வூதியர் சங்க மாநிலத் தலைவர் பி.கிருஷ்ணன், மாவட்ட நிர்வாகி பாலகுமார் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.