districts

img

அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்க விதொச வலியுறுத்தல்

ஈரோடு, டிச.11- அரக்கன்கோட்டை பகுதியில் 40  வருட சாகுபடி அனுபவ நிலங்க ளுக்கு பட்டா வழங்க வேண்டும் என விவசாய தொழிலாளர் சங்கம் வலியு றுத்தி உள்ளது. அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கத்தின் கோபிச்செட்டி பாளையம் தாலூகா மாநாடு கே.சி.ரங்கசாமி தலைமையில் கோபியில் ஞாயிறன்று நடைபெற்றது. சங்கத் தின் கொடியினை மூத்த தலைவர் சின்ன கருப்பன் ஏற்றி வைத்தார். அறிக் கைகளை தாலுகா செயலாளர் வி. ஆர்.மாணிக்கம், பொருளாளர் அய் யாசாமி ஆகியோர் முன்வைத்தனர். மாவட்ட செயலாளர் கே.சண்முக வள்ளி சிறப்புரையாற்றினார். விவ சாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஏ.எம்.முனுசாமி, கரும்பு விவசாயி கள் சங்க நிர்வாகி எஸ்.முத்துசாமி, சிஐடியு எஸ்.சி.பிரகாசம், சிபிஎம் தாலூகா செயலாளர் யுவராஜ், துரை சாமி ஆகியோர் வாழ்த்துரையாற்றி னர். இம்மாநாட்டில் நகராட்சி, பேரூ ராட்சி பகுதிக்கும் 100 நாள் வேலை  வாய்ப்பு திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். தூய்மை பணியாளர் களை நிரந்தரப்படுத்த வேண்டும். 60 வயது நிரம்பிய அனைவருக்கும் ஓய் வூதியமாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண் டும். பாரதி நகர், எல்லமடை, கூகலூர், கொளத்துக்கடை, தாழைக்கொம் பூர், உப்புபள்ளம் மக்களுக்கு மயான இடம் அளிக்க வேண்டும். அரக்கன் கோட்டையில் 40 ஆண்டு காலமாக சாகுபடி அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். நீண்ட காலமாக அரசு புறம்போக்கு நிலத் தில் குடியிருப்போருக்கு உடனடி யாக பட்டா வழங்க வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின் கோபிசெட்டிபாளையம் தாலுகா  தலைவராக வி.ஆர்.மாணிக்கம், செய லாளராக கே.சி.ரங்கசாமி, பொருளா ளராக அய்யாச்சாமி உள்ளிட்ட 18 பேர் கொண்ட தாலுகாக்குழு அமைக்கப் பட்டது.