districts

img

சேற்றில் சிக்கிய வாகனம்

திருப்பூர் ஜூன் 17- வியாழக்கிழமை திருப்பூரில் மாலை ஒரு மணி நேரம் பெய்த கனமழையின் காரணமாக திருப்பூர் வீதிகளில் மழை நீர் வெள்ளமென ஓடியது. அதே சமயம் நகரில் நான்காவது  குடிநீர் திட்டம் மற்றும் பாதாளச் சாக்கடை பணிகளுக்காக தோண்டி குழாய்கள் பதித்து மூடப்பட்ட இடங்களில் முழு மையாக சீரமைக்கப்படாததால் அந்த இடம் மழைநீர்  இறங்கி சேறும், சகதியுமாக மாறியது. முருங்கப்பாளை யத்தில் இருந்து குமார் நகர் செல்லும் பாதையில் தனியார்  வாகனம் ஒன்று இந்த சேற்றில் சிக்கியது. மூன்று மணி நேர  போராட்டத்துக்குப் பிறகு இந்த வாகனம் இழுவை வாகனம்  மூலம் மீட்கப்பட்டது.