districts

img

விஏஓ லஞ்சப் பட்டியல் வெளியீடு: கிராமமக்கள் ஆவேசம்

அவிநாசி, பிப்.10-  அவிநாசி அருகே செம்பி யாநல்லூர் கிராம நிர்வாக  அலுவலர் லஞ்சம் பெறுவது தொடர்பான விலை பட்டி யல் குறித்து பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டதால் பரபரப்பு  ஏற்பட்டது.  திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம் செம்பி யாநல்லூர் வருவாய் வட்டத் திற்கு உட்பட்ட கிராமத்தில் இறப்பு சான்றிதழ் உள்ளிட்டவைகள் பெற பொதுமக்களிடம் கிராம நிர்வாக அலுவலர் கட்டாய லஞ்சம் பெருவதாக வும், இதுதொடர்பாக அரசு உயர் அதிகாரிகளிடம் முறை யிட்ட போதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த அப் பகுதி மக்கள் விஏஓ-வின் லஞ்ச தொகை பட்டியலை  பிளக்ஸ் பேனராக அச்சடித்து வைத்ததால் அப்பகுதியில் பர பரப்பு ஏற்பட்டது.  இதில், மணிகாரர் அம்மாவிடம் சென்று யாரும் வாக்கு  வாதம் செய்ய வேண்டாம். பட்டா, சிட்டா, இறப்புச் சான்றி தழ், அடங்கல், வாரிசு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், விதவை சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் பெறுவதற்கு எவ்வளவு தொகை லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பிளக்ஸ் பேனரால் அப்பகுதி யில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.