திருப்பூர், ஜூலை 18 - வேலம்பாளையம் நகரம் முழுவதும் உள்ள சாலைகளை செப்பனிட வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வேலம்பாளையம் நகர 8 ஆவது மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்ட துணை செயலாளர் டி.உமாசங்கர் துவக்கவுரை ஆற் றினார். இம்மாநாட்டில் நகரத் தலைவராக ப.ரகுபதி, நகரச் செயலாளராக செ.வசந்த், பொருளாளராக நா.இளவேனில் மற்றும் 12 போ் கொண்ட நகர கமிட்டி தோ்வு செய்யபட் டுள்ளது. இதில் 40 மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனா். வேலம்பாளையம் நகரம் முழுவதும் உள்ள சாலைகளை செப்பனிடவும், கிடப்பில் போடப்பட்டுள்ள அணைப்பாளை யம் மேம்பால பணிகளை விரைந்து முடிக்கவும், அனுப்பர்பா ளையத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைத்திடவும் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிறைவாக வாலிபர் சங்க வடக்கு நகர செயலாளர் கண் ணன் நிறைவுரை ஆற்றினார்.