கோவை, நவ.17- மார்க்சிஸ்ட் கட்சியின் தொண்டாமுத்தூர் ஒன்றியச் செயலாளராக வி.மணி தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் ஒன்றிய 7 ஆவது மாநாடு, வடவள்ளி கூத் தாண்டவர் கோவில் அரங்கத் தில், தோழர்கள் என்.சங்கரய்யா மற்றும் சீத் தாராம் யெச்சூரி ஆகியோரது நினைவரங் கில் ஞாயிறன்று நடைபெற்றது. இம்மாநாட் டிற்கு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முத்தம் மாள், வி.பாண்டியன் ஆகியோர் தலைமை வகித்தனர். மூத்த தோழர் மீனாட்சி சுந்தரம் செங்கொடியினை ஏற்றி வைத்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் சி.பார்த்திபன் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.தெய் வேந்திரன் துவக்கவுரையாற்றினார். ஒன்றி யச் செயலாளர் வி.மணி அறிக்கையை முன் வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.ஆர்.பழனிச்சாமி வாழ்த்திப் பேசினார். இம்மாநாட்டில், பாரதியார் பல் கலைக்கழகத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு உடனடியாக உரிய பாக்கித் தொகையை வழங்க வேண் டும். மேற்கு தொடர்ச்சி மலை யில் ஈஷா, காருண்யா உள் ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்க ளின் ஆதிக்கத்தை தமிழக அரசு கட்டுப்படுத்தி, சுற்றுச் சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். நொய்யல் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். வீரகேரளம் பகுதியில் சாக் கடை கால்வாய் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். குடிநீர் விநி யோகத்தை முறைபடுத்த வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, கட்சியின் தொண்டா முத்தூர் ஒன்றியச் செயலாளராக வி.மணி மற்றும் 11 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.ஆறுச்சாமி நிறைவுரை யாற்றினார். முடிவில், வி.பாண்டியன் நன்றி கூறினார்.