திருப்பூர், செப்.17- மார்க்சிய போராளி, எழுத்தாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் ஆசிரியர் செ.நடேசனின் இரண் டாம் ஆண்டு நினைவஞ்சலி செவ்வாயன்று கடைப்பிடிக்கப் பட்டது. ஊத்துக்குளி ஆர்.எஸ்- எல் செவ்வாய் காலை 8.30 மணியளவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊத்துக்குளி ஆர்.எஸ். கிளை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு வி.கே. பழனிசாமி தலைமை வகித்தார். கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஆர்.குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் வி.ஏ.சரவணன், சிஐடியு பொதுத்தொ ழிலாளர் சங்க தலைவர் கே.பெரியசாமி, இந்திய ஜனநா யக வாலிபர் சங்க தாலுக்கா செயலாளர் கு.பாலமுரளி ஆகி யோர் தோழர் நடேசனின் பன்முக செயல்பாடுகளை நினைவு கூர்ந்து உரையாற்றினர். இந்நிகழ்வில் கட்சி அணியினர், அவ ரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.