சேலம், ஆக. 2- அறிவிக்கப்படாத மின் வெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் ஏற்காடு மின்சார வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். ஏழைகளின் ஊட்டி என அழைக் கப்படும் தமிழ்நாட்டின் முக்கிய மான சுற்றுலாத் தலம் ஏற்காடு ஆகும். இங்கு தற்போது அடிக்கடி, மின்வெட்டு நிகழ்கிறது. ஏற் காட்டில் மின் பகிர்மான நிலையம் அமைத்து கொடுக்க வேண்டும். அனைத்து கிராமங்களுக்கும் தடையில்லாத மின்சாரம் வழங்க வேண்டும். பட்டிபாடி, அக்கரை யூர் புதூர் கிராமத்திற்கு புதிய மின் இணைப்பு வழங்க வேண்டும். சுற்றுலா பயணிகள் அச்சமின்றி நடக்க மின்விளக்கு அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத் தப்பட்டன. சிபிஎம் ஏற்காடு ஒன்றியச் செய லாளர் டி.நேரு தலைமையில் ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாவட்டச் செயலாளர் மேவை.சண்முகராஜா, தாலுகா குழு உறுப்பினர்கள் தில்லைக்கரசி, கிருஷ்ணமூர்த்தி, பழனிசாமி, எழுத் தாளர் ஏற்காடு இளங்கோ உள் ளிட்ட திரளானோர் கலந்து கொண் டனர்.