districts

img

கீழ் நாடுகாணி சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து

உதகை, ஜன.17- கூடலூரில் இருந்து கீழ் நாடுகாணி வழியாக கேரளா செல்லும் சாலையில் ஞாயிறன்று லாரி கவிழ்ந்து விபத் துக்குள்ளானது. நீலகிரி மாவட்டம், நாடுகாணி - கீழ் நாடுகாணி இடையே உள்ள வளைவான சாலை பகுதியில் கேரளா வில் இருந்து கர்நாடகாவிற்கு பிளைவுட் லோடு ஏற்றி வந்த சரக்கு லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளா னது. இதில், லாரி ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பி னார். இருப்பினும், சரக்கு லாரி சாலையில் ஒரு பக்க மாக கவிழ்ந்ததால் மறுபக்கமாக வாகனங்கள் இயக்கப் பட்டன.  அதேநேரம், இப்பகுதியில் இந்த ஒரே மாதத்தில் மூன்று விபத்துகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, நாடு காணியிலிருந்து தமிழக எல்லைப் பகுதி வரை உள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் காணப்படுகி றது. மேலும், நாடுகாணி - கீழ் நாடுகாணி இடையே உள்ள இப்பகுதியில் சாலை வளைவாகவும், இடது புறம் தாழ்வாகவும் உள்ளதாலும், வாகனங்கள் அடிக் கடி விபத்தில் சிக்குகின்றன. எனவே, மோசமான நிலை யில் உள்ள இந்த சாலையை சீரமைத்து தடுப்புச் சுவரை உயர்த்தி கட்ட வேண்டும் என்று வாகன ஓட்டி கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.