திருப்பூர், ஜூன் 19- திருப்பூர் பெருமாநல்லூர் விவ சாய தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு ஞாயிறன்று (ஜூன் 19) தியாகிகள் நினைவிடத்தில் தமிழ் நாடு விவசாய சங்கத்தினர் அஞ்சலி செலுத்தினர். 1970ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் விவசாய பம்பு செட்டுக்கு ஒரு பைசா மின் கட்ட ணம் உயர்வு செய்யப்பட்டது. இதை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் விவ சாயிகள் பேரெழுச்சியுடன் போராட் டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட் டத்தின் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூரில் நடை பெற்ற போராட்டத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் ராம சாமி கவுண்டர், மாரப்ப கவுண்டர், ஆயிக்கவுண்டர் ஆகியோர் களப் பலி ஆனார்கள். இவர்களின் உயிர் தியாகத்திற்கு பின் தான் தமிழகத் தில் இலவச மின்சாரத்திற்காக பல் வேறு கிராமங்களிலும், நகரங்களி லும் போராட்டங்கள் வெடித்தது. அதன் பலனாய் விவசாய பம்பு செட் டுகளுக்கு இலவச மின்சாரம் தமிழக விவசாயிகளுக்கு கிடைத்தது என் பது குறிப்பிடத்தக்கது. இந்த வீரத் தியாகிகளின் நினை வாக பெருமாநல்லூரில் நினைவுத் ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது. அந்த நினைவிடத்தில் 52ஆவது நினைவு தினமான ஞாயிறன்று (ஜூன் 19) காலை 9 மணியளவில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு விவ சாயிகள் சங்க திருப்பூர் வடக்கு ஒன் றிய செயலாளர் எஸ்.அப்புசாமி தலைமை வகித்தார். மாவட்ட செய லாளர் ஆர்.குமார் நினைவுரை ஆற் றினார். வடக்கு ஒன்றிய தலைவர் கே.ரங்கசாமி நன்றி தெரிவித்தார். மாவட்ட துணை தலைவர் எஸ்.கே. கொளந்தைசாமி, மாவட்ட துணை செயலாளர் எஸ்.வெங்கடாசலம், வடக்கு ஒன்றிய பொருளாளர் ஆறு முகம், மில் தொழிலாளர் சங்க நிர் வாகி பழனிசாமி, சிபிஎம் வடக்கு ஒன்றிய செயலாளர் கே.காளியப் பன், மாவட்டக் குழு உறுப்பினர் ஆ. சிகாமணி, வடக்கு ஒன்றிய குழு உறுப்பினர் கருப்புசாமி, ஓய்வூதி யர் சங்க தலைவர் ஜி.சண்முகம் உள் ளிட்டு ஏராளமான விவசாயிகளும், தோழர்களும் கலந்து கொண்டனர். இதைதொடர்ந்து அத்திக்கடவு அவிநாசி திட்ட போராட்டக்குழு, களஞ்சியம் விவசாயிகள் சங்கம், கிராமிய மக்கள் இயக்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் உயிர் நீத்தவர்களுக்கு நினைவு மணிமண்டபம் அமைத்து தரக் கோரியும் கோரிக்கை எழுந்துள் ளது. இதில் சுப்பிரமணியம், சம்பத் குமார், சதீஷ், ஆனந்தி மற்றும் தியாகிகளின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.