districts

img

தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன் மறைவுக்கு அஞ்சலி

திருப்பூர், அக்.2- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர்  கோடியேரி பாலகிருஷ்ணன் மறைவுக்கு  திருப்பூரில் ஞாயிறன்று இரங்கல் நிகழ்ச்சி  நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  திருப்பூர் மாவட்ட அலுவலகம் முன்பாக  தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன் உருவப் படம் வைக்கப்பட்டு அனைவரும் மலர்  தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் கட்சியின் மாநிலக் குழு உறுப் பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.உன்னிகிருஷ்ணன், எம்.  ராஜகோபால், டி.ஜெயபால், மாநகரச் செய லாளர் பி.ஆர்.கணேசன், ஒன்றிய செய லாளர் ஆர். காளியப்பன், மாவட்ட குழு  உறுப்பினர்கள் ஆர்.மைதிலி, சம்சீர் அகமது  உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். மலர் அஞ்சலிக்கு பிறகு கோடியேரி பால கிருஷ்ணனின் பணிகளை நினைவு கூர்ந்து தலைவர்கள் உரையாற்றினர்.