திருப்பூர், ஆக. 8 – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முது பெரும் தலைவரும், மேற்கு வங்க முன்னால் முதல்வருமான புத்ததேவ் பட்டாச்சார்யா வியாழனன்று கொல்கத்தாவில் காலமா னார். அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூரில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் மாவட்ட அலுவலகமான அவிநாசி சாலை தியாகி பழனிச்சாமி நிலையம் முன் பாக அஞ்சலிக் கூட்டம் நடத்தப்பட்டது. மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினரும், திருப்பூர் மாவட்டச் செய லாளருமான செ.முத்துக்கண்ணன் இரங்கல் உரையாற்றினார். கட்சியின் வடக்கு மாநகரச் செயலாளர் பி.ஆர்.கணேசன் தலைமையில் பலர் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தி, அனைவரும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். அதேபோல் தாராபுரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் தாலுகா அலுவலகம் முன்பாக அவ ரது உருவப்படம் வைக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தாலுகா செயலாளர் என்.கனகராஜ், தாலுகா குழு உறுப்பினர் ஆர்.வெங்கட்ராமன், கே.ராஜேந் திரன், பி.பொன்னுச்சாமி, எஸ்.கண்ணுச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.