districts

img

காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை, அக்.11- போக்குவரத்து கழகங் களில் உள்ள காலிப்பணி யிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போக்குவரத்து தொழி லாளர்களுக்கான 15 ஆவது  ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை துவங்க வேண்டும். புதிய  ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். டிஏ உள்ளிட்ட பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். போக்குவரத்து கழகங்களில் உள்ள ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழுதடைந்த பேருந்து களை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் செவ்வாயன்று பொள்ளாச்சி பணிமனை, கோவை போக்குவரத்து தலைமையகம், உதகை பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டங்களில் அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத் தலைவர் எம்.வேளாங்கண்ணி ராஜ், பொதுச்செயலாளர் எம்.பரமசிவம், பொருளாளர் ஆர்.கோபால் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.