நாமக்கல், செப்.29- தீபாவளி பண்டிகைக்கு இன் னும் ஒரு மாதமே உள்ள நிலையில், தனியார் மண்டபங்களை வாடகை பிடிக்க ஜவுளி வியாபாரிகள் தீவி ரம் காட்டி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் என்றால் அனைவரின் நினைவில் வருவது முட்டை வியாபாரம் தான். ஆனால், அந்த மாவட்டத்தில் ஒவ்வொரு பகு தியிலும் அந்த ஊரின் தன்மைக் கேற்ப சில பொருட்கள் பிரசித்தி பெற்றுள்ளன. அதன்படி, குமார பாளையம் மற்றும் பள்ளிபாளை யத்தில் விசைத்தறியும், பரமத்தி வேலூரில் வெல்லம் உற்பத்தி மற் றும் வாழை விவசாயமும், கொல்லி மலையில் மிளகு என மற்றவைக ளும் தனித்தன்மை வாய்ந்தவைகளா கும். மேலும், பிரதானமாக குறிப் பிட்டால் ஜவுளி உற்பத்தி மற்றும் ஜவுளி விற்பனை அதிகளவு நடை பெறும். இந்நிலையில், அக்.31 ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண் டிகை கொண்டாடப்பட உள்ளது. ஜவுளி வியாபாரிகள் மற்றும் உற் பத்தியாளர்கள் விற்பனைக்கான முன்னேற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஒரே இடத்தில் ஆண்டு முழுவதும் கடை நடத்துபவர்கள் போல, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதி களிலிருந்து கடை அமைப்பவர்கள் கடைகளையும், மண்டபங்களையும் வாடகைக்கு எடுத்து கடை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தருமபுரி மாவட் டத்தைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி ஒரு வர் கூறுகையில், ஒவ்வொரு ஆண் டும் சேலம், கோவை, சென்னை, காஞ்சிபுரத்தில் கடை அமைப்போம். அந்த மாவட்டத்தில் விசேஷ தினங் களை மையப்படுத்தி, கடைகளை அமைப்பது வழக்கம். அதனடிப் படையில் தீபாவளி பண்டிகையை யொட்டி, பள்ளிபாளையத்தில் விற் பனை சிறப்பாக இருக்கும். வரு டம் முழுவதும் தற்காலிக ஜவுளிக் கடையை அமைத்து வருகிறோம். தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன் பாக வந்து மக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதி மற்றும் போக்கு வரத்து அதிகம் உள்ள பகுதியில் மண்டபத்தை வாடகைக்கு பிடித்து கடை நடத்தி வருகிறோம். அதில் நாங்கள் பல்வேறு மாநிலங்களில் கொள்முதல் செய்த ஜவுளிகளை வியாபாரத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்வோம். தற்போது, தீபாவளி பண்டிகைக்கு குறுகிய வாரங்களில் உள்ளது. கடந்தாண்டு வியாபாரம் செய்த அதே மண்ட பத்தை வாடகைக்கு பிடித்து, தற் போது தற்காலிக கடை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். எங்களைப் போலவே எங்கள் உற வினர்களும், பர்னிச்சர் தொழிலில், வீட்டு உபயோகப் பொருட்கள் கண் காட்சி, தொழில் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கண்காட்சி, பொழுதுபோக்கு கண்காட்சி என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். மேலும், வருடந்தோ றும் நாடோடிகளாக சென்று பல்வேறு இடங்களில் தொழில்களை செய்து வருவோம். இந்த தீபாவளி சமயத் தில் செய்யப்படும் இந்த வியாபா ரம் மிக சிறப்பானதாக இருக்கும் என் பதால் கூடுதல் உற்சாகத்துடன் பணி களை செய்து வருவதாக, அவர் தெரி வித்தார்.