districts

img

திருப்பூரில் இருசக்கர வாகன ஊர்வலமாக சென்று தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த நோட்டீஸ்

திருப்பூர், மார்ச் 11- திருப்பூரில் மத்திய தொழிற்சங்க நிர்வாகிகள் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாகச் சென்று மார்ச் 28, 29 அகில இந்திய வேலைநிறுத்த  போராட் டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு தொழில் அமைப்புகளின் நிர்வாகி களிடம் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங் கினர். மார்ச் 28, 29  தேதிகளில் ஒன்றிய  அரசின் மக்கள் விரோத, தொழிலா ளர், விவசாயிகள் விரோத கொள்கை களைக் கைவிட வலியுறுத்தி அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டம் நடத் தப்படுகிறது. இப்போராட்டத்தை வெற் றிகரமாக நடத்துவதற்கு திருப்பூரில் தொழிற்சங்கங்கள் ஆயத்தமாகி வரு கின்றன. இந்நிலையில், சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப், எம்எல்எப், ஐஎன்டியுசி, எச்எம்எஸ் ஆகிய சங்கங்களின் நிர் வாகிகள் வியாழனன்று காலை திருப் பூர் தியாகி குமரன் நினைவகம் முன்பி ருந்து இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக திருப்பூர் ஏற்றுமதியா ளர் சங்கம், தென்னிந்திய பின்ன லாடை உற்பத்தியாளர் சங்கம் (சைமா), திருப்பூர் ஏற்றுமதியாளர் உற்பத்தி யாளர் சங்கம் (டீமா) மற்றும் திருப் பூர் பின்னலாடை துணி உற்பத்தியா ளர் சங்கம் (நிட்மா) ஆகிய தொழில்  அமைப்புகளின் அலுவலகங்க ளுக்குச் சென்று அந்தந்த சங்கங்களின் நிர்வாகிகளிடம் வேலை நிறுத்தம் செய்வது தொடர்பான நோட்டீஸை வழங்கினர்.