உதகை, ஜூன் 20- முதுமலையில் ஒரு மணி நேரம் புல் தரையில் விளையாடிய புலியை, சுற்றுலா பயணிகள் அமைதியாக ரசித்தனர். மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத் தில் கடந்த ஒரு மாத காலமாக பெய்து மழை யால், மாவட்டம் முழுவதும் பச்சை பசே லென காட்சி அளிக்கிறது. குறிப்பாக முது மலை புலிகள் காப்பகம் பசுமை நிறைந்து காணப்படுகிறது. இந்நிலையில், சனியன்று மாலை வாகன சவாரி மூலம் முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது கிராஸ்கட் வனப்பகுதி சாலை ஓரத்தில் உள்ள புல்வெளியில், 10 வயது மதிக்கத் தக்க ஆண் புலி ஒன்று ஒய்யாரமாக சில மணி நேரம் ஓய்வு எடுத்தது. அதன்பின் புல்வெளியில் அங்கும் இங்கும் திரும்பிய வாறு சுற்றுலாப் பயணிகளை பார்த்த அந்த புலி, சற்று நேரம் சுற்றுலா பயணிகளை கூர்ந்து நோக்கியது. இருப்பினும் சுற்றுலாப் பயணிகளை பொருட்படுத்தாத அந்த புலி சில மணி நேரம் அப்பகுதியில் அமர்ந்தவாறு சுற் றுலா பயணிகள் புகைப்படம் எடுக்கும் போது பல்வேறு போஸ் கொடுத்தது. இதைத் தொடர்ந்து கம்பீரமாக எழுந்து நின்ற அந்த புலி, ஒய்யாரமாக வனப்பகுதிக்குள் நடந்து சென்றது. சுமார் ஒரு மணிநேரத்திற் கும் மேலாக சுற்றுலாப் பயணிகளுக்கு காட் சியளித்த அந்த புலியை கண்டு சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன், அமைதியாக கண்டு ரசித்தனர்.