districts

img

புதிய திட்டம் வகுக்க விவசாய சங்கம் வலியுறுத்தல்

திருப்பூர், ஜூலை 5 - நொய்யல் ஆற்று வெள்ள நீரை பயன்படுத்தி பல்லடம் மேற்குப் பகுதி  குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்பிட புதிய திட்டம் வகுத்து செயல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள்  சங்கம் கோரியுள்ளது. பல்லடம் கே.அய்யம்பாளையத் தில் செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் ஒன்றியப் பேரவை  சங்க ஒன்றிய தலைவர் கே.வி.சுப்பிரம ணியம் தலைமையில் நடைபெற்றது. ஒன்றியப் பொருளாளர் பழனிசாமி வர வேற்றார். ஒன்றிய செயலாளர் வை.பழ னிசாமி வேலையறிக்கை முன் வைத்து  பேசினார். மாவட்ட செயலாளர் ஆர்.குமார் சிறப்புரையாற்றினார். மார்க்சிஸ்ட் கட்சி  ஒன்றிய செயலாளர் பரமசிவம் வாழ்த் திப் பேசினார். இம்மாநாட்டில் சங்கத் தின் ஒன்றியத் தலைவராக கே.வி.சுப்பிர மணியம், செயலாளராக வை.பழனி சாமி, பொருளாளராக லோகநாதன், துணைத்தலைவராக சோமசுந்தரம், துணை செயலாளராக சம்பத்குமார் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப் பட்டனர். பிஏபி தண்ணீர் கடைமடை வரை செல்ல வாய்க்கால்கள் முழுமையாக தூர் வார வேண்டும். உயர் மின் கோபுர  பாதிப்பு விவசாயிகளுக்கு சந்தை மதிப் பில் இழப்பீடு வழங்க வேண்டும், மாத  வாடகை வழங்க வேண்டும். திருப்பூர்  உழவர் சந்தைக்கு வர உழவர்களுக் கான தனி பேருந்து இயக்கிட வேண்டும்.  நொய்யல் வெள்ள நீரை பயன்படுத்தி பல்லடம் மேற்குப் பகுதி குளம், குட்டை களுக்கு நீர் நிரப்பிட புதிய திட்டம்  வகுத்து செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. நிறைவாக ராமசாமி நன்றி கூறினார்.