திருப்பூர், ஜன.27 - ஆப்பிரிக்கா கண்டத் தின் மிக உயரமான சிகர மான, கிழக்கு ஆப்பிரிக்கா வின் டான்சானியா நாட்டில் உள்ள கிளிமஞ்சாரோ மலை சிகரத்தை ஐந்து நாட்களில் அடைந்து திருப் பூர் இளைஞர் சாதனை படைத்துள்ளார். திருப்பூர் மாவட்டத் தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் கனிஷ் விஜய குமார். இவர் பேட்மிட்டன் விளையாட்டு வீரர் ஆவார். சாதனைகள் நிகழ்த்த வேண்டும் என்ற உந்துதலில் ஆரம்பத்தில் சுகாதார விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை மேற்கொண்டு ஆயி ரம் கிலோ மீட்டர் சென்றடைந்தார். பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்கும் அங்கிருந்து திருப்பூருக்கும் ஆறு நாட்களில் இந்த பயணத்தை மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக மாநிலத்திற்கும், பெருமை சேர்க்கும் விதத்தில் சாதனை நிகழ்த்த வேண்டும் என்று மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டார். கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எவ ரெஸ்ட் பேஸ் கேம்ப் (இ.பி.சி) எனப்படும் கடல் மட்டத்திலி ருந்து 5364 மீட்டர் உயரத்தில் உள்ள சிகரத்தை அடைந் தார். அதன் தொடர்ச்சியாக 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய சுதந்திர தினத்தன்று மணாலியில் அமைந் துள்ள 6111 மீட்டர் உயரமுள்ள யே யுனம் என்ற சிகர உச் சியை அடைந்து சாதனை படைத்தார். இதன் தொடர்ச்சியாக ஆப்பிரிக்கா கண்டத்தின் மிக உய ரமான சிகரத்தை அடைவது என்று தீர்மானித்து 2024 டிசம் பர் மாதம் டான்சானியா நாட்டிற்கு சென்றார். அங்கு கடல் மட்டத்திலிருந்து 5895 மீட்டர் உயரத்தில் உள்ள கிளிமஞ்சாரோ மலை சிகரத்தை ஐந்து நாட்களில் சென்றடைந்தார். அதுவும் தனது உடல் தகுதியையும் மன உறுதியையும் சோதித்துப் பார்க்கும் விதத்தில் 60 கிலோ மீட்டர் மலையேற்றம் உள்ள மிகவும் கடினமான, மச்சமே என்ற வழித்தடத்தை தேர்ந்தெடுத்து பயணித்தார். இவரது இந்த சாதனைக்காக இந்தியா புக் ஆப் வேர்ல்ட் ரெக் கார்ட்ஸ் என்பதில் இருந்து இவருக்கு சான்றிதழும் பதக்க மும் வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இருந்து மலையேற்றத்தில் சாதனை படைத்துள்ள கனிஷ் விஜயகுமார் கடந்த வெள்ளி அன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல் விழி செல்வராஜ் மற்றும் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றார்.