திருப்பூர், அக்.28- திருப்பூர் மருத்துவ கல்லூரி மருத்துவம னையில் தூய்மைப் பணிக்கு ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனம் தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்களை அமல்படுத்தாமல் உள்ளது. மேலும் ஆட்சியர் அறி வித்த தினக்கூலி ரூ.745 வழங்கபடுவதில்லை. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூய்மைப் பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மனு அளித்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்வு கூட்டம் திங்களன்று நடை பெற்றது. இதில் திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை தூய்மைப் பணியாளர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனையில் 200 க்கும் மேற்பட்டோர் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவலர்களாக பணிபுரிந்து வருகிறோம். மாவட்ட ஆட்சியர் அறிவித்த 2022-23ஆம் ஆண்டிற்கான தினக்கூலியை பெற்று வருகிறோம். 2024 ஆம் ஆண்டிற்கான தினக்கூலி
இன்று வரை வழங்கப்ப டவில்லை. தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப் பட்ட இஎஸ்ஐ, பிஎப் விவரங்களை ஒப்பந்தம் எடுத் துள்ள நிறுவனம் இன்று வரை தெரிவிக்கவில்லை. ஒப்பந்த நிறுவனத்தின் பங்கு தொகையை இன்று வரை செலுத்தப்படவில்லை. ஒப்பந்த நிறுவனம் ஒப்பந்தம் எடுத்த காலம் முதல் இதுவரை போனஸ் தொகை ஏதும் வழங்கப்படவில்லை. போனஸ் சட் டங்களின்படி போனஸ் கட்டாயம் வழங்கப்பட்டி ருக்க வேண்டும். தமிழ்நாடு ஒப்பந்த தொழிலாளர் கள் சட்டம் 1975ன்படி பணியாற்றும் பணியாளர் களுக்கு ஓய்வறை, கழிவறை, உணவக வசதிகள் செய்து தர வேண்டும் என்று பிரிவு 42 முதல் 57 வரை தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவம னையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் மருத்துவக் கழிவுகள், மருந்துகள் மற்றும் நோயாளி களுடன் பணியாற்றி பின் குளிப்பதற்கு எவ்வித வச தியும் செய்து தரப்படாததால், பேருந்தில் பயணம் செய்யும் போது துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. தொழிலாளர் நலச் சட்டங்களின் படி ஓய்வறை, குளியலறை, துணி துவைப்பதற்காக வசதிகள் செய்து தரப்பட வேண்டும். குறைந்தபட்ச ஊதி யத்தை ஒப்பந்தம் எடுத்த நிறுவனங்கள் கண்டிப் பாக வழங்கியே தீர வேண்டும். சம்பளத்துடன் வார விடுமுறை கட்டாயம் வழங்க வேண்டும். தொழிலா ளர் நலச் சட்டங்கள் பிரிவு 25 முதல் 28 வரை வழங்கப் பட்டிருக்கிறது. ஆனால் அரசு மருத்துவமனை களில் விடுமுறை எடுத்தால் சம்பளம் பிடித்தம் செய்யப்படுகிறது. எனவே இப்பிரச்சனையில் தலையிட்டு தொழிலாளர்களுக்கு அளிக்க வேண் டிய நிலுவைத் தொகை ஊதியத்தை உடனடி யாக வழங்க வழிவகை செய்ய வேண்டும். வார விடுமுறை மற்றும் போனஸ் வழங்கிடவும், ஆட்சி யர் அறிவித்த தினக்கூலி ரூ.745 வழங்க தக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. திருப்பூர் மருத்துவ கல்லூரி மருத்துவம னையில் ஆடியோகிராம் கருவியை இயக்க நிபு ணர் நியமிக்க கோரிக்கை: மாற்றுதிறனாளிகள் அளித்த மனுவில் கூறியி ருப்பதாவது, அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் குறைகளையும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் வாரந்தோறும் மருத்துவ ரீதியாக பரிசோதித்து அவர்களுக்கு உடனடியாக சான்றிதழ் வழங்குவ தில் திருப்பூர் மாவட்டம் முன்னணியில் உள்ளது. இந்நிலையில், திருப்பூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், செவித்திறன் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளிகளின் கேட்புத்திறனை கண்டறிவதற்கான கருவி (ஆடியோகிராம்) உள் ளது. ஆனால் அதை இயக்குவதற்கான பரிசோ தனை நிபுணர் பணியிடத்தில் கடந்த ஆறு மாதங்க ளுக்கும் மேலாக ஆளில்லை. இதனால் செவித்தி றன் குறைபாட்டு தன்மையின் அளவு சான்று பெறு வதற்கு கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை அல்லது பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு சென்று வர வேண்டியுள் ளது.
இது மாற்றுத்திறனாளிகளுக்கு மிகுந்த அலைச்சலை ஏற்படுத்துகிறது. எனவே உடனடி யாக கருவியை இயக்குவதற்கான பணியிடத்தில் தகுந்த நபரை பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்தப் பணியிடத்தில் நபர் நியமிக்கப்படும் வரை, அரசு பதிவு பெற்ற தனியார் பரிசோதனை நிலையத்தில் பெற்ற கேட்புத்திறன் அளவீடு ஆடியோகிராம் ரிப்போர்டை ஏற்று மாற்றுத்திறனாளி சான்று வழங்க ஆணை வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராம னின் பிஏ கொலை மிரட்டல் விடுவதாக புகார்: மனு அளிக்க வந்த சாந்தாமணி (63) என்பவர் கூறியிருப்பதாவது, நான் குடிமங்கலம் தாலுகா மூங்கில் தொழுவு பிரிவு பகுதியில் வசித்து வருகி றேன். இங்கு எனக்கு 1 ஏக்கர் விவசாய நிலம் உள் ளது. இந்நிலையில், பொள்ளாச்சி ஜெராமனின் பிஏ வீராசாமி என்பவர் இந்த நிலையத்தை என்னிடம் விலைக்கு கேட்டார். நான் மறுத்ததை அடுத்து, கடந்த நான்கு மாதங்களாக தொடர்ந்து ஆட்களை கூட்டி வந்து கொலை மிரட்டல் விடுத்து வரு கிறார். இதுகுறித்து குடிமங்கலம் காவல் நிலை யத்தில் புகார் அளிக்க சென்றோம். அப்போது மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கும் படி தெருவித்தனர். இதையடுத்து இங்கு புகார் அளிக்க வந்தோம் . 1966 ஆம் ஆண்டு எனது மாமனார் எனக்கு அளித்த நிலத்தை அபகரிப்பதற்காக தொடர்ந்து எனக்கு கொலை மிரட்டல் விடும் வீராசாமி மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என்றார். மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பிர வீன் மற்றும் ரவிசந்திரன் என்பவர் அளித்த மனு வில் கூரியிருப்பதாவது, என் பெயர் ரவிசந்திரன் உடுமலை சேரன் நகர் பகுதியில் குடியிருந்து வரு கிறேன். எனது மகன் கிருத்திக் உடுமலை ஆர்கே அர் ஜிஆர்கேஏஸ் பள்ளியில் 2022-2023 கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு படித்து வந்தான். இந்நி லையில் எனது தொழில் பாதிப்பு ஏற்பட்டுவிட் டது. எனவே சொந்த ஊருக்கு சென்றுவிடலாம் முடிவு எடுத்துவிட்டோம். இதையடுத்து எனது மகனின் பள்ளியில் டிசி வழங்குமாறு கேட்டேன். ஆனால் அவர்கள் பணம் கட்டினால் தான் டிசி வழங்குவோம் என தெரிவித்து விட்டனர். ஏன்னால் அவர்கள் கேட்கும் பணத்தைகட்ட முடிய வில்லை. இதனால் எனது மகன் ஒரு வருடம் பள் ளிக்கு செல்ல முடியவில்லை. அடுத்த ஆண்டா வது எனது மகனை வேறு பள்ளியில் சேர்க்க டிசி வேண்டும். எனது மகனின் எதிர்கா லத்தை கருத்தில் கொண்டு ஆர்கேஅர் ஜிஆர்கேஏஸ் பள்ளி நிர்வாகதிடம் என் மகனுக்கு டிசி வாங்கி தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது. கறிக் கடைகளை அகற்ற கோரிக்கை: அவிநாசி முத்துச்செட்டிப்பாளையத்தில் குடி யிருப்பு பகுதியில் அமைந்துள்ள கீர்த்தனா கோழிக் கடை மற்றும் விக்னேஷ் மட்டன் ஸ்டால் கழிவு களை சாக்கடையில் கலந்து விடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. பொதுமக்களுக்கு தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் இக்கடை களின் உரிமையாளர் மீது நடவடிக்கை வேண்டும். குடியிருப்பு பகுதியிலிருந்து கடைகளை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என வழக்கறிஞர் ஒரு வர் மனு அளித்தார்.