திருப்பூர், ஆக. 22 – திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நடப்பு (2020 – 20201) நிதியாண்டின் முதல் நான்கு மாத காலத்தில் ரூ.4 ஆயிரத்து 325 கோடியாக பதிவாகி உள்ளது. முன்னதாக கொரோனா ஊரடங்கு மார்ச் 24ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஏப்ரல் மாதம் முழுமையாக தொழில் முடங்கியது. பின்னர் மே 6 ஆம் தேதி நிபந்தனையுடன் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி வழங்கப் பட்டது. எனினும் படிப்படியாக பின்னலாடை நிறுவனங்கள் தங்கள் இயக்கத்தைத் தொடங்கி நடத்தி வருகின்றனர். ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூலை மாதத்துடன் இந்த நிதி யாண்டின் முதல் நான்கு மாதங்கள் முடிவ டைந்த நிலையில் ரூ.4 ஆயிரத்து 325 கோடி ஏற்றுமதி ஆகியுள்ளது. இது நம்பிக்கை அளிப்பதாக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா சண்முகம் கூறியுள்ளார். எனி னும் முந்தைய நிதியாண்டின் முதல் நான்கு மாத காலத்துடன் ஒப்பிட்டு ஏற்றுமதி அளவில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை அவர் தெரி விக்கவில்லை. அதேசமயம் அகில இந்திய அளவில் கடந்த 2019 – 20 ஆண்டு முதல் நான்கு மாத காலத்தில் ரூ.38 ஆயிரத்து 398 கோடிக்கு ஏற்று மதி நடந்துள்ளது. இந்த 2020 – 21 நிதியாண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரை முதல் நான்கு மாத காலத்தில் ரூ.18 ஆயிரத்து 928 கோடிக்கு மட்டுமே ஏற்றுமதி ஆகியுள்ளது. பொது முடக் கத்தால் இந்தளவு சரிவைச் சந்தித்துள்ளது. இது முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 51 சதவிகிதம் வீழ்ச்சியாகும். ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் வெளியிட் டுள்ள புள்ளிவிபரத்தில் இது தெரியவந்துள் ளது.
அகில இந்திய சராசரியுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் திருப்பூர் ஏற்றுமதி அளவு கொரோனா பொது முடக்கத்தின் நான்கு மாத காலத்தில் இதே அளவுக்கு பாதிக்கப்பட்டி ருக்கும் என்பது உறுதி. எனினும் கொரோனா பொது முடக்கத்துக்கு முன்பே இந்தத் தொழில் பல நெருக்கடிகளைச் சந்தித்து வந் தது. கடந்த இரண்டாண்டு காலத்தைக் கணக் கிட்டாலும் அகில இந்திய அளவில் ஏற்றுமதி அளவு சுமார் 3 சதவிகிதம் அளவுக்கு சரிவ டைந்தது. குறிப்பாக மத்திய அரசின் தவறான கொள்கைகள் காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா வைக் காரணங்காட்டி அரசு தனது பொறுப் பில் இருந்து நழுவி தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறது என்று ஏற்றுமதியாளர்கள் தரப் பில் வேதனை தெரிவித்தனர்.