திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஊராட்சி ஒன்றியம் புதுப்பாளையம் ஊராட்சி முருகம்பாளையத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் பாரத பிரதமரின் கிராமிய குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வரும் வீடுகளை, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்குக்குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் பொது கணக்குக்குழு உறுப்பினர்கள் வியாழனன்று பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதில் ஆட்சியர் கிறிஸ்துராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.