districts

img

பாகிஸ்தான் தோல்வியை நாடாளுமன்றத்தில் விசாரிக்க போகிறார்களாம்?

மினி உலகக்கோப்பையில் போட்டியை நடத்திய பாகிஸ்தான் அணி, சொதப்பலான ஆட்டத்தால் லீக் போட்டிகளில் படுதோல்வியை சந்தித்தது மட்டுமல்லாமல், தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறியது. ரூ.300 கோடிக்கும் அதிகமான அளவில் செலவு செய்து வெறும் லீக்  போட்டிகளில் பாகிஸ்தான் வெளியேறி யுள்ளது தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுகோள் விடுக்கப்படுமென பாகிஸ்தான் நாட்டின் உயர் அரசு அதி காரியான ராணா சனவுல்லா தெரிவித்துள் ளார். இதுதொடர்பாக அவர்  கூறுகை யில், “பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) தனிப்பட்ட நிறுவனம். அதனால் அவர்கள் நினைத்ததை செய்யக் கூடி யவர்கள். ஆனால் பாகிஸ்தான் அணி யின் தற்போதைய நிலைமை குறித்து அமைச்சரவை மற்றும்  நாடாளுமன்ற மக்களவையில் பேச பிரதமரிடம் வேண்டுகோள் வைப்போம்.  அதாவது பாகிஸ்தான் பிரதமரிடம் இந்த விவகாரம் விரைவில் கொண்டு செல்லப்படும். பாகிஸ்தான் கிரிக்கெட்டில் 10 ஆண்டுகளாக பல உயர்வு, தாழ்வு ஏற்பட்டு கிரிக்கெட் வாரியத்தை பலமுறை மாற்றிக் கொண்டிருக்கிறோம். அதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் நடைபெறும் செலவு குறித்து மக்கள் பார்வைக்கு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும். முக்கியமாக பிசிபி-யில் அங்கம் வகிக்கும் கிரிக்கெட் ஆலோசகர்கள் ரூ.50 லட்சம்  வாங்கிக்கொண்டு அவர்களது கடமையை செய்ய தெரியாதது போல  இருக்கிறார்கள். வேலை செய்யா மலே பணத்தை மட்டும் வாங்கிக் கொள்கிறார்கள். இது பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு நல்லது அல்ல” என அவர் கூறினார். இது புதுசு கிரிக்கெட் உலகில் ஒரு நாடு உலகக்கோப்பை போன்ற முக்கியமான தொடரில் தோற்றுவிட்டால் அணியின் கேப்டன், வீரர்கள், பயிற்சியாளர் மாற்றம், அணியின் உள்கட்டமைப்பு மாற்றியமைப்பு, கிரிக்கெட் வாரிய உறுப்பினர்களிடம் விளக்கம் கேட்பு மற்றும் எதிர்கால நடவடிக்கை தொடர்பாக அடுத்தக் கட்ட நட வடிக்கை மேற்கொள்ளப்படும். ஆனால் பாகிஸ்தான் நாட்டிலோ நாடாளுமன்றத்தில் விசாரிக்கும் அளவிற்கு செல்ல இருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.