districts

img

காவல் துறை கட்டுப்பாட்டிலிருந்த லாரியில் டயர், டீசல் திருட்டு

சேலம், ஜன.9- கன்னங்குறிச்சி அருகே பறிமுதல் செய்யப்பட்டு  காரிப்பட்டி காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் டயர்கள் மற்றும் டீசல் திருடப்பட்டுள்ளதாக லாரி  உரிமையாளர் புகார் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த அசோகன் என்பவர், தனக்கு சொந்தமான லாரியை வாட கைக்கு விடும் தொழில் செய்து, வாழ்வாதாரத்தை நடத்தி  வருகிறார். கடந்தாண்டு மே மாதம் காரிப்பட்டி காவல் நிலைய  எல்லை பகுதியில் லாரியை வாடகைக்கு எடுத்தவர்கள், புறம் போக்கு நிலத்தில் மண் அள்ளப் பயன்படுத்தியதால், காரிப் பட்டி காவல் துறையினர் லாரியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த டிப்பர் லாரி காரிப்பட்டி காவல் நிலைய வளா கத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விசா ரணை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில்,  லாரி உள்ள நிலைமையை பார்ப்பதற்காக அசோகன், கடந்த  வாரம் காவல் நிலையத்திற்கு சென்று பார்த்துள்ளார். அப் போது லாரியிலிருந்து புதிய டயர்கள் மூன்று மற்றும் 220 லிட்டர்  டீசல் காணாமல் போயிருந்தது. ஏற்கனவே வங்கி கடன் பெற்று  தான் லாரியை வாங்கியுள்ளதாகவும், தற்போது லாரியின் வரு மானம் இல்லாததால் என்னால் வங்கி கடனை கட்ட முடியா மல் இருக்கிறேன். தற்போது லாரியிலிருந்து மூன்று லாரி  டயர்கள் மற்றும் 220 லிட்டர் டீசல் காணாமல் போயிருப் பது வேதனை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக காவல் ஆய்வாளரிடம் கேட்டபோது திருட்டுப் போய் உள்ளதாகவும், அதுதொடர்பாக விசாரணை  நடத்தப்பட்டு வருவதாக கூறுகிறார். எனவே, தனது லாரியில்  இருந்த புதிய டயர்கள் மற்றும் 220 லிட்டர் டீசல் உள்ளிட்ட வைகளை மீட்டு தர வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.  காவல் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள லாரியில் டயர் மற் றும் டீசல் திருடப்பட்டுள்ள சம்பவம் சேலத்தில் பெரும் பரப ரப்பை ஏற்படுத்தி உள்ளது.