திருப்பூர், ஜூலை 30 - பல்லடம் அருகே வழியில் பணம் மற்றும் ஆவணங்களுடன் தவறவிட்ட மணிபர்சை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் எடுத்து காவல் துறையினர் மூலம் உரியவரி டம் ஒப்படைத்தனர். பல்லடம் கோவை சாலையில் காளி வேலம்பட்டி பிரிவு அருகில் மார்க்சிஸ்ட் கட்சி யின் காளி வேலம்பட்டி கிளை உறுப்பினர் கந்தசாமி வியாழக்கிழமை காலை நடைப யிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பாதையில் மணிபர்ஸ் ஒன்று கிடந்தது. யாரோ தமது மணிபர்சை தவற விட்டுச் சென்றி ருந்தனர். இதையடுத்து அவர் அந்த மணி பர்சை எடுத்து வியாழனன்று காலை பல்லடம் வாலிபர் சங்க நிர்வாகிகள் மூலம் பல்லடம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு ஆய்வாள ரிடம் நேரில் ஒப்படைத்தனர்.அதன் பின்னர் சம்பந்தப்பட்டவரை அழைத்து, அந்த மணி பர்சை அவரிடம் காவல் துறையினர் ஒப்ப டைத்தனர். அருள்புரத்தில் நிட்டிங் கம்பெனி வைத்திருக்கும் சத்தியதேவன் என்பவரது மணிபர்ஸ் என்பது தெரியவந்தது. இந்த மணி பர்சில் ரூ.6 ஆயிரம் பணம் மற்றும் ஏடிஎம் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தன. காவல் துறையினரிடமிருந்து இதைப் பெற் றுக் கொண்ட சத்தியதேவன், தான் தவறவிட்ட மணிபர்சில் பணம் மற்றும் இதர ஆவணங்கள் அனைத்தும் சரியாக உள்ளது என்றும், நேர் மையாக எடுத்து ஒப்படைத்தமைக்கு தன்னு டைய நன்றியையும் பாராட்டுகளையும் அவர் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் வாலிபர் சங்க பல்லடம் ஒன்றிய தலைவர் சி.முருகேசன், மார்க்சிஸ்ட் கட்சியின் பல்லடம் ஒன்றிய செயலாளர் ஆர். பரமசிவம் மற்றும் வாலிபர் சங்க காளிவே லம்பட்டி கிளை நிர்வாகி சசி ஆகியோர் பங் கேற்றனர்.