districts

img

நஞ்சராயன் குளத்தினை மேம்படுத்தும் பணிகள் தீவிரம்: மாவட்ட ஆட்சியர் தகவல்

திருப்பூர், செப்.6- நஞ்சராயன் குளத்தினை மேம்ப டுத்தவும், பறவைகள் குறித்து சூழல்  சுற்றலா மூலம் விழிப்புணர்வு ஏற்ப டுத்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருவதாக 17 ஆவது பற வைகள் சரணாலயமான நஞ்சராயன் குளத்தை வெள்ளியன்று ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.  திருப்பூர் ஊத்துக்குளி சாலை சர்க்கார் பெரியபாளையம் கிராமத் தில் 440 ஏக்கர் பரப்பளவில் அமைந் துள்ளது நஞ்சராயன் குளம். ஆண் டுதோறும் கால சூழலுக்கு ஏற்றவாறு  வெளிநாட்டு பறவைகளின் வருகை  நஞ்சராயன் குளத்தில் அதிகரிக்கும்.  தமிழக அரசு கடந்த 2022 ஆம் ஆண்டு  நஞ்சராயன் குளத்தை 17ஆவது பற வைகள் சரணாலயமாக அறிவித்தது.  பறவைகள் சரணாலயத்திற்கான பணிகளை மேற்கொள்ள முதற்கட்ட மாக ரூ.7.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வெள்ளியன்று மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் நஞ்சராயன் குளம் பறவைகள் சர ணாலயத்தில் ஆய்வு மேற்கொண் டார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் கூறுகையில், திருப் பூரில் நகரப்பகுதியிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் நஞ்சராயன் குளம் அமைந்துள்ளது. சுமார் 125  ஹெக்டர் பரப்பளவு கொண்ட இக்கு ளத்தில் ஆண்டு முழுவதும் வரும்  பறவைகளின் வருகை கணக்கின்  படி, 186 வகை பறவைகள் வந்து  செல்கின்றன. வெளிநாடுகளிலி ருந்து குளிர்காலங்களில் வாழ்விட சொர்க்கமாகவும், பறவைகள் இன பெருக்கம் செய்வதற்கும் இந்த குளம் சிறப்பான இடம். தமிழ்நாடு அர சால் தமிழ்நாட்டின் 17 ஆவது பறவை கள் சரணாலயமாக 2022 ஆம் ஆண் டும் செப்.12 ஆம் தேதி அறிவிக்கப் பட்டது. இதையடுத்து நஞ்சராயன் குளத்தினை மேம்படுத்தவும், பற வைகள் குறித்து சூழல் சுற்றலா மூலம்  விழிப்புணர்வு ஏற்படுத்த நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகி றது. மேலும் இக்குளத்திற்கு தேவை யான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வனத்துறைக்கு அறிவுறுத் தப்பட்டுள்ளது என்றார்.  இதுகுறித்து பறவைகள் ஆர்வ லர்கள் கூறுகையில், வரும் அக்டோ பர், நவம்பர் மாதங்களில் வலசை வரும் பறவைகள் மார்ச் மாதம் வரை  இங்கு தங்கியிருந்து தங்கள் தாய்  நாட்டிற்கு திரும்பிச் செல்லும். இந்த  ஆண்டு கோடை வெயிலின் தாக்கம்  அதிக அளவு இருந்ததாலும், நஞ்சரா யன் குளத்தில் தண்ணீர் வற்றாமல் உள்ளது. இதன்காரணமாக, பறவை கள் வசிப்பதற்கான சூழல் நிலவுவ தால் வழக்கத்தை விட உள்நாட்டு பற வைகளின் எண்ணிக்கை அதிகரித் துள்ளது. பறவைகள் சரணாலயமாக  தமிழக அரசு அறிவித்ததன் காரண மாக மீன்பிடிக்க தடை விதிக்கப்பட் டது. இதனால், பறவைகளுக்கான இரை தட்டுப்பாடு இன்றி கிடைக்கி றது. நஞ்சராயன் குளத்தில் உள்ள  திட்டு மேடுகள், முள் மரங்கள் இவற் றால் கூடு கட்டுவதற்கு வசதியாக உள்ளதால் பறவைகளின் விருப்ப இருப்பிட மாக நஞ்சராயன் குளம்  மாறி வருகிறது. உரிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டால், இது சிறந்த சுற்றுலாததலமாக மாறும் என  தெரிவித்தனர். இந்த ஆய்வின்போது, மாவட்ட வன அலுவலர் தேவேந்திரகுமார் மீனா,  ஊத்துக்குளி வட்டாட்சியர் (பொ) ராகவி,  ஊத்துக்குளி வட்டார  வளர்ச்சி அலுவலர் சரவணன், உள் ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.