ஒன்றுபட்ட கோவை மாவட்டத் தில் திருப்பூர் வடக்குப் பகுதி என்பது 14 பஞ்சாயத்துக்கள் உள்ளடக்கிய பகுதியாகும். இந்த வட்டாரத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவரான கே.எஸ்.கே அவர்களின் தொழிற்சங்க நடவடிக்கையால் ஈர்க்கப்பட்டு, பஞ்சாலை, பவர் லூம், பாத்திரம், விசைத்தறி என பலதரப்பட்ட தொழில்களில் இருந்து இளைஞர்கள் தொழிற்சங்க நடவ டிக்கையிலும், மார்க்சிஸ்ட் கட்சியி லும் தங்களை இணைத்துக்கொண் டனர். 1971 - 72 காலகட்டத்தில் அச்சு, பனி யன் அண்ட் பொதுத் தொழிலாளர் கள் சங்கத்தில் விசைத்தறித் தொழிலா ளர்களும் உறுப்பினர்களாக சேர்க் கப்பட்டனர். அந்த சமயத்தில் தொழி லாளர் உரிமைகளுக்காக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் பெருமாநல் லூர் வி.பி.சாமிநாதன், போயம்பா ளையம் கே.காமராஜ் ஆகியோர் முன் னணி ஊழியர்களாயினர். இதில் விசைத்தறித் தொழிலாளியான கே. காமராஜ் தீவிர தொழிற்சங்கப் போராட் டங்களில் ஈடுபட்டதால், விசைத்தறி கூடங்களில் வேலை மறுக்கப்பட்டு, முழு நேர ஊழியராக கட்சி பணியில் ஈடுபட்டு படிப்படியாக உயர்ந்து, தற் போது கட்சியின் மாநிலக்குழு உறுப் பினராக உள்ளார். 40 கிளைகள் இருக்கும் வடக்கு ஒன்றிய பகுதியில் 1981ஆம் ஆண்டு அங்கேரிபாளையம் பகுதியில் வி. பழனிச்சாமி, கே.பழனிச்சாமி, பி. ராஜூ, பி.குருசாமி ஆகியோர் முதன் முதலில் துணைக் குழு மூலம் கட்சிக் குத் தேர்வு செய்யப்பட்டு முதல் கிளை உருவாக்கப்பட்டது. இந்த கிளைக்கு டி.டி.பி. மில் கட்சி கிளையைச் சேர்ந்த கே.பழனிச்சாமி, அங்கேரிபாளையம் கிளை செயலாளராக பணியாற்றி னர். (பின்னாளில் தோழர் பி.ராஜு ஒன்றியச் செயலாளர் ஆகவும், மாவட்ட செயற்குழு உறுப்பினராக வும் பணியாற்றியனார். தோழர் கே. பழனிச்சாமி 9 ஆண்டு காலம் வடக்கு ஒன்றியச் செயலாளராக பணியாற்றி னார். தோழர் பி.குருசாமி ஒன்றியக் குழு உறுப்பினராக பணியாற்றினார்). இதே காலகட்டத்தில் ஆஷர் மில் கட்சி கிளை தோழர்கள் கே.மாரப்பன், வி.பி.சாமிநாதன் ஆகியோர் வடக்கு பகுதி முழுவதும் அறியப்பட்ட தலை வர்களாக பணியாற்றினார்கள். 1984 இல் பொங்குபாளையம் எஸ்.அப்பு சாமி, காளம்பாளையம் பி.சுப்பிர மணி, ராமசாமி, சங்கர், பெருமாநல் லூர் விஸ்வநாதன், கே.ரங்கசாமி, கிட்டுச்சாமி ஆகியோருடன் பெரு மாநல்லூர் கிளையாக உருவாக்கப் பட்டது. இந்தக் காலம் என்பது பஞ்சா லைத் தொழிலாளர்கள், பாத்திரத் தொழிலாளர்கள், பனியன் தொழிலா ளர்கள் மிகவும் ஈர்ப்புத்தன்மையோடு தங்களை சிஐடியு தொழிற்சங்கத்தில் இணைத்துக் கொண்ட காலமாகும். மக்களின் அடிப்படை பிரச்சனைக ளுக்காக தொடர்ந்து போராடி வரும் இயக்கமாக நமது பகுதியில் மார்க் சிஸ்ட் கட்சி உள்ளது. குறிப்பாக பட்டி யலின மக்களுக்கு இலவச வீட்டு மனை பெற்றுக் கொடுப்பதில் நம் தோழர்கள் முனைப்போடு பணியாற் றினார்கள்.
குறிப்பாக, ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி, கருக்கங்காட்டு புதூர் பகு தியில் பட்டியல் இன மக்கள் தங்கள் சொந்த பணத்தில் இடம் வாங்கி குடி யேறச் சென்ற பொழுது ஆதிக்க சக்தி கள் தடுத்த போதும் தோழர் கே.எஸ்.கே தலைமையில் தோழர் வி.பி.சாமி நாதன் உள்பட தலைவர்கள் அந்தப் பகுதிக்குச் சென்று நூற்றுக்கணக் கான மக்களைத் திரட்டி குடியேறு வதற்கான இடம் அளவீடு செய்து கொடுக்கப்பட்டது. அங்கேரிபாளை யம் கிழக்கு வீதியில் இது போல் 30க்கும் மேற்பட்ட பட்டியலின மக்க ளுக்கு தோழர்கள் தலையீட்டில் வீட்டு மனை பெற்றுக் கொடுக்கப்பட்டது. பல பகுதியில் அரசு புறம்போக்கில் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா நமது முயற்சி யில் பெற்றுக் கொடுக்கப்பட்டது.
அத்திக்கடவு - அவிநாசி திட்டம்
1957 ஆம் ஆண்டு முதல் அத்திக் கடவு - அவிநாசி திட்டத்தை நிறை வேற்றக்கோரி ஆர்ப்பாட்டம், கால வரையற்ற உண்ணாவிரதம், மறி யல், மாநாடுகள், பிரச்சாரம், கருப்புக் கொடியேற்றம், காத்திருக்கும் போராட் டம், கடையடைப்பு, பந்த், மாவட்ட ஆட்சியரிடம் வாக்காளர் அடையாள அட்டை ரேசன் கார்டுகள் திருப்பி ஒப்படைக்கும் போராட்டம், அலுவல கத்தில் காத்திருக்கும் போராட்டம் என நீண்ட நெடிய போராட்டங்கள் மார்க்சிஸ்ட் கட்சியால் நடத்தப்பட்டுள் ளன. கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி யன்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இத்திட்டத்தை துவக்கி வைத்துள்ளார். திட்டம் நிறைவேறு வதற்காக பல்வேறு கட்டப் போராட் டங்கள் கடந்த 65ஆண்டு காலமாக நடத்தியது மார்க்சிஸ்ட் கட்சி. தற்போ தும், இத்திட்டத்தில் விடுபட்ட குட்டை களை நிரப்ப வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
தீர்க்கப்பட்ட பிரச்சனைகள்:
பூலுவட்டி முதல் வாவிபாளையம் வரை சாலையை சரி செய்ய வேண்டும் என தொடர் போராட்டத்தினால் அந்த சாலை சரி செய்யப்பட்டதும், மழை நீர் வடிக்கால் கட்டியதும், காந்திநகர் முதல் நல்லாறு வரை ராஜவாய்க்கால் தூர் வார வேண்டுமென தொடர்ந்து போராடியதன் விளைவாக தற்போது பணி நடைபெற்று வருவதும், இப்படி பல்வேறு இயக்கங்களை சொல்லிக் கொண்டே போகலாம். மக்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் அங்கு களம் காணும் இயக்கமாக மார்க்சிஸ்ட் கட்சி உள்ளது. பெருமாநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா மருத்துவம னையாக மாற்ற வேண்டும் எனவும், வடக்கு பகுதியில் பெண்கள் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் எனவும், திறப்பு விழா நடந்து பல மாதங்கள் ஆகியும் செயல்படாத இ.எஸ்இ. மருத்துவமனையை உட னடியாக செயல்படுத்தக் கோரியும், வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி 20.10.2024 (இன்று) வடக்கு ஒன்றிய மாநாடு பெருமாநல்லூர் அம்மன் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. மார்க்ஸ், ஏங்கல்ஸ் வெளியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை இறுதி வரிகள் கூறியதைப் போல, தற்போது நிலவும் அனைத்து சமூக நிலைகளை யும் பலவந்தமாகத் தூக்கியெறிவதன் மூலமே தங்கள் லட்சியங்களை நிறைவேற்ற முடியும் என்று கம்யூ னிஸ்டுகள் ஒளிவுமறைவின்றிப் பறை சாற்றுகிறார்கள். இழப்பதற்கு ஒன்று மில்லை, அடிமைச் சங்கிலிகளைத் தவிர! அடைவதற்கோர் பொன்னு லகம் காத்திருக்கிறது!, என்கிற வைர வரிகளை நெஞ்சில் சுமந்து மாநாட்டில் சங்கமிப்போம்!!!
-ஆர்.காளியப்பன்,
திருப்பூர் வடக்கு ஒன்றியச் செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.