districts

img

வழித்தட வரைபட நகல் கேட்டால் தகவல் உரிமை சட்டத்தில் பதில் இல்லை

ஈரோடு, ஜன.2- பவானிசாகர் அருகே வழித்தட வரைபட நகல் கேட்டு, தகவல் அறியும் உரிமை சட்டப்படி கேட்ட விண்ணப்பத்திற்கு பதில் இல்லை என வந்துள்ளது.  ஈரோடு, பவானிசாகர் அருகே உள்ள தொப்பம்பா ளையம் பகுதியைச் சேர்ந்த வர் தங்கவேல். கடந்த 40  ஆண்டுகளாக அப்பகுதியில் வசித்து வருகிறார். இவரது மனைவி விஜயா தொப்பம்பாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர். கடந்த நவ.8 ஆம் தேதியன்று சத்தியமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் தொப்பம் பாளையம் கிராமத்தில் உள்ள இடம் இவ ருக்கு தான செட்டில்மென்ட் ஆக பதிவு செய்யப்பட்டது. அந்த வழித்தடத்திற்கான வரைபடம் தேவை என பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவலக பொது தகவல் அலுவல ரிடம் தகவல் அறியும் உரிமை சட்டப்படி கேட் டுள்ளார். அதுகுறித்து பதிலோ, வரை படமோ, ஆவணங்களோ இதுவரை கிடைக்கப் பெறவில்லை. இதற்கிடையில் தொப்பம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பொது வழித்தடத்தை ஆக் கிரமித்து 8.5 சென்ட் இடம் தங்கராஜ் என்பவ ருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவ் வாறாக முறைகேடு செய்துள்ள ஊராட்சி மன்ற தலைவர் உமா மகேஸ்வரிக்கு ஆதர வாக பொதுத்தகவல் அலுவலர் செயல்படுவ தாகத் தெரிகிறது. எனவே, உரிய விசாரணை  நடத்தி தேவையான தடம், வரைபடம் கிடைக்க ஆவண செய்யுமாறு தங்கவேல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.