districts

img

நிலம் அல்லது இழப்பீடு கேட்டு தமிழக முதல்வரை சந்திப்பது

கோவை, அக்.17– பாரதியார் பல்கலைக்கழகத் திற்கு நிலம் கொடுத்த விவசாயிக ளுக்கு இழப்பீடு கொடு அல்லது நிலத்தை திருப்பி எங்களுக்கே கொடுக்க வேண்டும் என்கிற கோரிக் கையோடு தமிழக முதல்வரை நேரில் சந்தித்து முறையிடுவது, அல்லது பல் கலைக்கழகத்தை முற்றுகையிட்டு தீர்வை எட்டுவது என நிலம் இழந் தோர் ஆலோசனை கூட்டத்தில் முடி வெடுக்கப்பட்டது.  பாரதியார் பல்கலைக்கழகத் திற்கு நிலம் வழங்கிய விவசாயிகள் இதுவரையில் இழப்பீடு பெறாமல்  உள்ளனர். இந்நிலையில், நிலம் இழந்த விவசாயிகளுடனான ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு விவசாய சங்கத் தின் முயற்சியில்  வடவள்ளி செங்குந் தார் மஹாலில் நடைபெற்றது. மார்க் சிஸ்ட் கட்சியின் தொண்டாமுத்தூர் ஒன்றிய செயலாளர் வி.மணி தலை மையில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி.சண்முகம் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார்.

இதில், சிபிஎம் கோவை மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன், மாவட்ட  செயற்குழு உறுப்பினர் என்.ஆறுச் சாமி, விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் வி.பி.இளங்கோவன், செய லாளர் வி.ஆர்.பழனிச்சாமி, பொரு ளாளர் கே.தங்கவேல், நிலம் இழந்த விவசாய சங்கத் தலைவர் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், பல்கலைக்கழகத்திற்கு நிலம் கொடுத்தவர்கள் அனைவரும் இணைந்து, சென்னை சென்று தமி ழக முதல்வர், உயர்கல்வித்துறை அமைச்சர், நிதித்துறைச் செயலா ளர் ஆகியோரை சந்தித்து முறை யிடுவது என இக்கூட்டத்தில் முடி வெடுக்கப்பட்டது. மேலும், இழப் பீட்டை தரத் தவறினால் எங்கள் நிலத்தை எங்களுக்கு கொடு என்று  முற்றுகை போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. ஆலோச னைக்கூட்ட முடிவில் சிபிஎம் வட வள்ளி கிளை செயலாளர் எம்.முரு கேசன் நன்றி கூறினார். இக்கூட்டத் தில், நிலம் இழந்த ஏராளமான விவ சாயிகள் பங்கேற்றனர்.