districts

img

நூல் விலை சர்வதேச விலையை விடக் குறைவாம்!

திருப்பூர், ஜன.11-  வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வரும் பருத்தி நூல் விலை உயர்வை கட்டுப் படுத்த கோரி திருப்பூர் எம்.பி. கே.சுப்பரா யன் எழுதிய கடிதத்திற்கு, நூல் விலை உச்சக் கட்டத்தில் இருந்து தற்போது குறைந்து வருகி றது, மேலும் சர்வதேச விலையை விட இங்கே குறைவாகவே இருக்கிறது என்று பதில் கடி தம் எழுதி இருக்கிறார் ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல். நூல் விலை கடந்த நவம்பர் மாதம் கிலோ வுக்கு ரூ50 அதிகரித்தது. திருப்பூர் உள்பட பல் வேறு ஜவுளி மையங்களில் இதற்கு எதிராக  உற்பத்தி அமைப்பினர் குரல் கொடுத்தனர். இந்த சூழ்நிலையில் கடந்த நவம்பர் 17ஆம் தேதி திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன் ஒன்றிய ஜவுளி மற்றும் தொழில், வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு கடிதம் எழுதி னார். இதில் நூல் விலை உயர்வைக் குறைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும், என்டிசி ஆலை களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். அந்த கடிதம் எழுதி ஒன்றரை மாதங்க ளுக்குப் பிறகு ஜனவரி 4ஆம் தேதி அமைச்சர் பியூஸ் கோயல் அவருக்கு பதில் கடிதம் எழுதி இருக்கிறார். அதற்குள்ளாக டிசம்பர் 1ஆம் தேதி நூல் விலை கிலோவுக்கு ரூ.10 குறைக் கப்பட்டு, ஜனவரி 1 ஆம் தேதி கிலோவுக்கு ரூ.30 கூட்டப்பட்டுள்ளது. பியூஸ் கோயல் கடி தத்தில் நூல் விலை உயர்வுக்கு நிவாரணம் ஏதாவது இருக்கிறதா என்று தேடித் தேடிப் பார்த்தால் எதுவுமே இல்லை. மாறாக நூல் விலை உயர்வை நியாயப்படுத்தியும், என்டிசி  ஆலைகளைத் திறக்க முடியாது என்றும் பதில் அளித்திருக்கிறார். இக்கடிதத்தில், ஜவுளி அமைச்சகம் இந்த துறை சார்ந்த அனைத்து பிரிவினருடனும் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், இந்த நூல் விலை உயர்வுக்கு உள்நாட்டிலும், உலக சந்தையிலும் பஞ்சு விலை அதிகரித்தி ருப்பது தான் காரணம் என்று விளக்கம் கூறி யிருக்கிறார். அத்துடன் நூலின் விலை, அதை  தயாரிப்பதற்கு உள்ளீடு செய்யப்படும் செலவு மற்றும் “சந்தை சக்தி”களால் தீர்மானிக்கப்படு கிறது என்றும் பாடம் நடத்தி இருக்கிறார். இருப்பினும் உச்சக்கட்ட உயர்வு நிலையில்  இருந்து நூல் விலை குறைந்து வருவதாகவும், சர்வதேச சந்தை விலையை விட இந்தியாவில் நூல் விலை குறைவாக இருப்பதாகவும் கூறி  இருக்கிறார். நூல் விலை உயர்வினால் சிறு, குறு, நடுத் தர பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் உள்பட ஜவுளி உற்பத்தியின் அனைத்துப் பிரிவின ரும் தற்போது தத்தளித்து வருகின்றனர். ஆனால் அமைச்சர் பியூஸ் கோயல் “சந்தை  சக்திகள்” நூல் விலையைத் தீர்மானிக்கின் றன என்று போதனை செய்து விட்டு அதைக் கட்டுப்படுத்த “அரசு தலையீடு செய்வது” என்ற தனது பொறுப்பை நிறைவேற்றப் போவ தில்லை என்று மறைமுகமாக குறிப்பிட்டி ருக்கிறார்.  ஆனால் அந்த “சந்தை சக்திகள்” யார் என்ப தையும் அவர் சொல்லியிருந்தால் நன்றாக  இருந்திருக்கும். அது பருத்தி உற்பத்தி செய் யும் விவசாயிகளோ, அதை கொள்முதல் செய்து நூல் தயாரிக்கும் நூற்பாலைகளோ இல்லை. இந்தியாவிலும், சர்வதேச அளவி லும் செயல்படக் கூடிய மிகப்பெரும் கார்ப்ப ரேட் இடைத்தரகர்கள்தான் அந்த “சந்தை சக்தி கள்”. அவர்கள் தான் நாட்டை ஆளும் பாரதிய ஜனதா அரசின் நண்பர்களாகவும் உள்ளனர். விவசாயிகளையும், தொழில் துறையினரை யும் பகைத்துக் கொண்டாலும் பரவாயில்லை, அந்த “சந்தை சக்திகளை” பியூஸ் கோயல் கோபித்துக் கொள்ள முடியுமா, என்ன!? -ந.நி