பள்ளிபாளையம், மார்ச் 22- கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், எழுமிச்சம் பழம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதி களில், சராசரியாக ஒரு எலுமிச்சம் பழம் நான்கு ரூபாய் முதல் ஐந்து ரூபாய் வரை விற்கப்பட்ட வந்த நிலையில், கடந்த சில தினங்களாக எலுமிச்சம் பழம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு பழம் ரூ.7 முதல் ரூ.8 வரை வைத்து விற்பனை செய்யப் பட்டு வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இந்த விலை யேற்றம் குறித்து எலுமிச்சம்பழம் பல வியாபாரி ஒருவர் கூறும் போது,தற்போது கோடை வெயில் கொளுத்துவதால் எலுமிச்சம் பழம் உற்பத்தி குறைந்து வரத்தும் குறைந் ்துள்ளது. தொடர்ந்து இரண்டு, மூன்று மாதங்களுக்கு வரத்து குறைவாகவே இருக்கும் என்பதால் விலை அதிகரித்து காணப்படுகிறது என்றார்.