அவிநாசி,ஜன.24- அவிநாசி அருகே ஒட்டர்பாளை யம் பகுதியில் மூன்று வருடங்கள் கடந்தும் கட்டி முடிக்கப்படாத பால் சொசைட்டி கட்டிடத்தை, விரைந்து முடிக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். அவிநாசி ஒன்றியம், புஞ்சை தாமரை குளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒட்டர் பாளையத்தில் 100க்கும் மேற் பட்ட விவசாயிகள் வசித்து வருகின் றனர். இவர்கள் கால்நடை வளர்ப்பில் அதிக அளவில் ஈடுபட்டுள்ளனர். மாடு மற்றும் எருமை பால்களை ஒட் டர் பாளையம் பகுதி கூட்டுறவு பால் சொசைட்டியில் ஊற்றி வந்தனர். இப் பகுதியில் அமைந்துள்ள கூட்டுறவு பால் சொசைட்டி கட்டிடம் பழுதடைந் ததால், தற்காலிகமாகப் பால் சொசைட்டி மேல்நிலை தொட்டியின் குறுகிய இடத்திற்கு மாற்றப்பட்டது. இதைதொடர்ந்து 2018 -19 ஆம் வருடத் தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி வேலை வாய்ப்பு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்து கட்டிடப் பணி கள் நடைபெற்றது. ஆனால் பாதியி லேயே நிறுத்தப்பட்டது. மூன்று வரு டங்கள் கடந்த நிலையில் இன்னும் நிறுத்தப்பட்ட பணிகள் தொடங்கப்ப டாமல் உள்ளது. தொடர்ச்சியாக ஊராட்சி நிர்வா கத்திடம் விவசாயிகள் இதுகுறித்து முறையிட்டும் பணிகள் நடைபெற வில்லை. இதில், மாவட்ட நிர்வாகம் தலையிட்டுக் கட்டிடப் பணிகளை விரைந்து முடித்து தருமாறு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.