திருப்பூர், ஜூன் 1- கடந்த ஜனவரி மாதம் புனரமைக் கப்பட்டு திறக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் இன்னும் முழுமையாக அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட வில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். திருப்பூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல் வேறு பணிகள் நடைபெற்று வருகின் றன. அந்த வகையில் பி.என்.சாலை யில் உள்ள புதிய பேருந்து பேருந்து நிலையம் ரூ.30.60 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்டு ஜன.5 ஆம் தேதி கட்டி முடிக்கப்பட்டது. இப்பேருந்து நிலையத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இப்பே ருந்து நிலையத்திலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ஈரோடு, சேலம், கோவை, மைசூர், மேட்டுப் பாளையம் செல்லக்கூடிய பேருந் துகள் இயக்கப்படுகிறது. மேலும், திருப்பூர் சுற்றுவட்டார ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளுக்காகவும் ஏராளமானோர் வந்து செல்லும் நக ரின் முக்கிய பேருந்து நிலையமாக உள்ளது. இந்நிலையில், புதிதாக 6 மாதங்களாகியும் இப்பேருந்து நிலை யத்தில் முறையான கழிப்பிடம் வசதி, தாய்மார்கள் பாலூட்டும் அறை, பய ணிகள் ஓய்வு எடுக்கும் அறை, பொருள் பாதுகாப்பு அறை ஆகி யவை பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து நிலையத்தில் அமைக் கப்பட்டுள்ள இரண்டு கழிப்பிடங்க ளும் பெரும்பாலும் மூடப்பட்டே காணப்படுகிறது. அதனால், ஆங் காங்கே சிறுநீர் கழிக்கப்பட்டு துர்நாற் றம் வீசுகிறது. பேருந்து நிலையத் தின் மறுபுறத்திற்கு செல்ல போடப் பட்டுள்ள நகரும் படிக்கட்டுகள் செயல்படாமல் உள்ளது. எந்த அடிப் படை வசதிகளும் இன்றி பொது மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வரு கின்றனர். இதுகுறித்து பயணிகள் சிலர் கூறு கையில், பேருந்து நிலையத்தில் முறையான அறிவிப்பு பலகைகள் இல்லை. பேருந்துகள் மாறி மாறி நிற்கின்றது. முக்கியமாக கழிப்பி டம் திறக்கப்படாமல் உள்ளது. மோச மான நாற்றம் வீசுகிறது. குடிநீர் தொட்டியில் தண்ணீர் வருவதில்லை. பேருந்து நிலையத்தின் மறுபுறம் குப்பை தொட்டிகள் இல்லை. ஜன வரி மாதமே பேருந்து நிலையம் புதுப் பிக்கப்பட்டுத் திறக்கப்பட்டாலும் இன்னும் முழுமையாக பணிகள் நிறைவேறாதது போல்தான் உள் ளது. கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் முழுமையாக நிறைவ டையவில்லை, என்றனர்.