கோவை, ஜன.27- கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் நிலை யில், மின்வாரியத்தை தனியார் மயமாக்கும் தமிழக அரசின் நடவடிக்கை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நடவடிக்கை என சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச்செய லாளர் எஸ்.ராஜேந்திரன் சாடியுள்ளார். மின் வாரிய பிரிப்பும் ஸ்மார்ட் மீட்டர் எதிர்ப்பும் என்ற தலைப்பில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு ஒண்டிப்புதூர் கோட்டம் சார்பில் சிறப்பு கருத்தரங்கம். சிந்தா மணிபுதூர் ஏகேஏ கல்யாண மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. இக்கருத்தரங் கத்திற்கு, சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு எம்.தண்டபாணி தலைமை வகித்தார். ஒண்டிப்புதூர் கோட்டக் கிளைத் தலைவர் எஸ்.கோவிந்தசாமி வரவேற்றார். கோட்டச் செயலாளர் எஸ்.சுரேஷ்குமார், மாந கர் செயலாளர் டி.மணிகண்டன், மாநகர் பொருளாளர் ஏ.சாதிக்பாட்சா, மாநில செயற் குழு உறுப்பினர் டி.பழனிச்சாமி, தமிழ்நாடு விவசாய சங்க கோவை மாவட்ட துணைச் செயலாளர் ஜெ.ரவீந்தரன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். இக்கருத்தரங்கத்தில் பங்கேற்று, தமிழ் நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில பொதுச் செயலாளர் எஸ்.இராஜேந்திரன் பேசுகையில், தமிழக மின் வாரியத்தில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் வெகு விரைவில் ஏற்படுத்தப்படும் என மின்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஸ்மார்ட் மீட்டர் திட்டம் தனியார் மையத்தின் ஒரு பகுதி தான், தமிழக அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை மிகப் பெரும் தொழில் நுட்பமாக சொல்கிறார்கள், தொழில்நுட்பத்திற்கு எதிரானவர்கள் அல்ல சிஐடியு சங்கத்தினர். ஸ்மார்ட் மீட்டரை ரோட்டகஸ் முறையில் மாட்டாமல், தமிழக மின்வாரிய நிர்வாகமே மின்வாரிய தொழிலா ளர்கள் மூலமாக நமது ஐடி விங்கை பயன்ப டுத்தி பொருத்துகிற வேலைகளை செய்ய வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதால் ஏற்படப் போகும் பாதிப்புகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். மின்வாரியம் தனியார் மயமானால், வேலைவாய்ப்புகள் பறிபோகும். தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக போராடி வருகின்ற சூழ்நிலையில், அமைச்ச ரின் இந்த அறிவிப்பு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் உள்ளது என்றார். இக்கருத்தரங்கில் திரளானோர் பங்கேற் றனர். முடிவில் என்.நித்யானந்தன் நன்றி கூறி னார்.