திருப்பூர், டிச. 13 - திருப்பூர் நொய்யல் ஆற்றங்கரையில் தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் திருவிழா ஜனவரி 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை கோலாகலமாகக் கொண்டாடப்ப டுகிறது. இந்த விழாவுக்கான இலச்சினையை மாநகர மேயர் ந.தினேஷ்குமார் திங்களன்று வெளியிட்டார். திங்களன்று மாநகராட்சி அலுவலகத்தில் இந்த இலச்சினை வெளியீட்டு நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் ஆர்.பாலசுப்பிரம ணியம், நொய்யல் பண்பாட்டு அமைப்பின் நிர்வாகிகள் அரிமா மு.ஜீவானந்தம், ஆர். ஈஸ்வரன், மோகன் கார்த்திக், வே.முத்துராம லிங்கம், ஜீவநதி நொய்யல் சங்கத்தின் சார்பில் அகில் சு.ரத்தினசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருப்பூர் மாநகரின் மையப் பகுதியில் நொய்யல் ஆற்றங்கரையில் யுனிவர்சல் தியேட்டர் சாலை சந்திப்பு பகுதியில் பிரமாண் டமான மேடை அமைக்கப்பட்டு இந்த விழா கொண்டாடப்பட உள்ளது. மாநில அமைச்சர் கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், மாநகரின் முக்கியப் பிரமுகர்கள் உள்பட அனைத்து தரப்பினர் பங்கேற்கும் மக்கள் திருவிழாவாக இது நடைபெறத் திட்டமிடப் பட்டுள்ளது. ஜனவரி 15 அன்று சமத்துவப் பொங்கல் வைத்து இந்த விழா தொடங்குகிறது. தொடர்ந்து மண்ணின் புகழ் பாடும், தமிழ் பண்பாடு மற்றும் கலாசாரத்தை பிரதிபலிக் கும் வகையில், வள்ளி கும்மி, பெருஞ்ச லங்கை ஆட்டம், பெண்கள் தப்பாட்டம், களரி-சிலம்பாட்டம் மற்றும் திருவண்ணா மலை பெரிய மேளம் ஆகியன இடம் பெறவுள் ளன. ஜன. 16ஆம் தேதி, கரகாட்டம், காவடி யாட்டம், கட்டைக்கால் ஆட்டம், தேவராட் டம், டொல்லு குனிதா (கர்நாடக மலையக கலை) நிகழ்ச்சி, நாட்டுப்புறப் பாடல்கள் இசை நிகழ்ச்சி ஆகியன நடைபெறவுள்ளது. தேசிய விருது பெற்ற பாடகி அட்டப்பாடி நஞ்சம்மாவுக்கு பாராட்டு விழாவும் நடக் கிறது. மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக 3 ஆயி ரம் குடும்பங்கள் இணைந்து, புத்தாடை அணிந்து, புதுப்பானையில் பொங்கல் வைக் கும் சமூக நல்லிணக்கப் பொங்கல் விழா நடை பெறவுள்ளது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை மாநக ராட்சி நிர்வாகத்துடன் இணைந்து, நொய்யல் பண்பாட்டு அமைப்பு மற்றும் ஜீவநதி நொய்யல் சங்கம் ஆகியன மேற்கொண் டுள்ளன.