திருப்பூர், டிச. 17 - உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் தின்னப்பட்டி ஊராட்சியின் (சாலையூர்) அவ லநிலையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. சாலையூரில் எரியாத தெருவிளக்கு, திறக்கப்படாமல் பாழடையும் நிலையில் பூட் டப்பட்டுக் கிடக்கும் பொதுக் கழிப்பிடங்கள், மரணப் படுகுழியாய் இருக்கும் சாலையூரின் உள்சாலைகள், நாறிக் கிடக்கும் சாக்கடை கள் என சுகாதாரம் மிக மோசமாக பாதிக்கப் பட்டுள்ளது. குடிநீர் குழாய் உடைந்து வீதியில் ஓடும் குடிநீர் ஆகியவற்றை கண்டால் ஊராட்சி நிர்வாகம் இருக்கிறதா? என்ற கேள் வியை ஏற்படுத்துகிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் வசிக்கும் சாலையூரின் கிழக்குப் பகுதியை உடுமலை பேட்டை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் தொடர்ந்து புறக்கணிக்கிறது என்று மார்க் சிஸ்ட் கட்சியின் உடுமலை ஒன்றியக்குழு செயலாளர் கி.கனகராஜ் குற்றஞ்சாட்டியுள் ளார். தின்னப்பட்டி ஊராட்சியில் மக்கள் கோரிக்கைகளுக்கும், அடிப்படைப் பிரச் னைகளுக்கும் உடனடியாக தீர்வு கண்டிட வேண்டும், இல்லாவிட்டால் கட்சியின் சாலை யூர் கிளை சார்பில் போராட்டம் நடத்த நேரி டும் என்றும் அவர் கூறியுள்ளார்.