districts

அனுபவ விளை நிலங்களில் முள்வேலி அமைக்க முயற்சி

தருமபுரி, ஆக.17- விவசாயிகளின் அனுபவ நிலங் களில் முள்வேலி அமைக்கும் வனத் துறையின் முயற்சிக்கு மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரி வித்துள்ளது. இதுதொடர்பாக சிபிஎம் தரும புரி மாவட்டக்குழு சார்பில் மாவட்டச் செயலாளர் குமார் விடுத்துள்ள அறிக்கையில், தருமபுரி மாவட்டத் தில் வனத்தை ஒட்டியுள்ள விவசாயி களுக்கு, தொடர்ந்து வனத்துறை யினர் இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றனர். புறம்போக்கு நிலங் களில் 70 ஆண்டுகளுக்கு மேலாக  குடியிருந்து சாகுபடி செய்து வரும் பழங்குடி அல்லாதவருக்கு பட்டா  வழங்க வன உரிமைச் சட்டம் வழி வகை செய்துள்ளது. இந்நிலை யில், பென்னாகரம் வட்டம், தொண்ண குட்டஅள்ளியில் விவசாயிகளின் சாகுபடி நிலத்தில் முள்செடி நட  முயற்சி மேற்கொள்ளப்பட்டுள் ளது, பாலக்கோடு வட்டத்திற்குட் பட்ட ஜக்கசமுத்திரம், ஜிட்டாண்ட அள்ளி ஆகிய பகுதிகளில் விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும் நோக்கில் மரங்களை ஏலம் விடுவ தற்கான முயற்சிகளை வனத் துறை தொடங்கியுள்ளது. காலம்  காலமாக புறம்போக்கு நிலத்தில் சாகுபடி செய்து வரும் விவசாயி களை வெளியேற்றும் வனத்துறை யினரின் செயல்பாட்டிற்கு மார்க் சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவிக் கிறது மேட்டூர் அணை கட்டும் பொழுது பென்னாகரம் வட்டம், ஏமனூர் பகு தியில் குடியமர்த்தப்பட்ட விவசாயி களுக்கு பட்டா வழங்க வேண்டும். அத்திக்கடவு – அவிநாசி திட் டத்தை தமிழ்நாடு முதல்வர் தொடங்கி வைத்துள்ளதை வர வேற்கிறோம். அதேபோல தருமபுரி மாவட்ட மக்களின் நீண்ட நாள்  கோரிக்கையான காவிரி உபரிநீரை ஏரிகளில் நிரப்பி நிலத்தடி நீரைச் செறிவூட்டும் திட்டத்தை விரைந்து  அமலாக்க நடவடிக்கை எடுக்க வேண் டும். மாவட்டத்தில் பல இடங்களில் நுண் நிதி நிறுவனங்கள் மகளிர் குழுக்கள் மூலம் பெண்களுக்குக் கடன் வழங்கியுள்ளன. இக்கடன் களை வசூலிப்பதில் பல்வேறு நிர் பந்தங்களைக் கொடுத்து வருகின் றன. இதனால் பெண்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். எனவே, நுண் நிதி நிறுவனங்கள்  கடன் வசூலில் கெடுபிடி செய்வதை  மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த  வேண்டும். இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.