விவசாயிகள், மீனவர்கள், பழங்குடி மற்றும் பட்டியலின மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை உடடினயாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வியாழனன்று, தருமபுரி மாவட்டம், நெருப்பூர் முதல் பென்னாகரம் வரை நடைபயணம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த நடைபயணத்திற்கு வழியெங்கும் பொதுமக்கள் பெரும் ஆதரவு அளித்தனர்.