districts

img

காயமுற்ற புலிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வனப்பகுதியில் விடுவிப்பு

காயமுற்ற புலிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வனப்பகுதியில் விடுவிப்பு உடுமலை, ஜூன் 17- உடுமலை வனச்சரகத் திற்குட்பட்ட பகுதியில் காய முற்ற நிலையில் சுற்றித்தி ரிந்த புலிக்கு, சிகிச்சை அளிக் கப்பட்டு, மீண்டும் வனப்பகு திக்குள் விடுவிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், உடு மலை அமராவதி வனச்சர கம், கீழானவயல் பகுதியில் புலிகள் கணக்கெடுப்பிற் காக கண்காணிப்பு கேமராக் களை பொருத்தி, வனத்து றையினர் கண்காணித்து வந் தனர். அதில் ஆண் புலி ஒன்று காயமுற்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ஆனை மலை புலிகள் காப்பக கள இயக்குநர் ராமசுப்பிரமணியம், துணை இயக்குநர் தேவேந்திர குமார் மீனா ஆகியோரின் உத்தரவின்பேரில், அமராவதி வனச்சரக அலுவலர் சுரேஷ் தலைமையில் 50 பேர் கொண்ட தனிக்குழு அமைக்கப்பட் டது. அடர்ந்த வனப்பகுதியில் பல்வேறு இடங்களில் கண்கா ணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, மூன்று இடங்களில் கூண்டுகள் அமைத்து, புலியின் நடமாட்டத்தை வனத்துறை யினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில், சனியன்று அங்கு வைக்கப்பட்டிருந்த கூண்டில் காயமுற்ற புலி அகப் பட்டது. இதன்பின் தேசிய புலிகள் ஆணையத்தில் வழிமுறை களின்படி, வன கால்நடை மருத்துவர்கள் விஜயராகவன், சதா சிவம் ஆகியோர் கூண்டிலிருந்த புலிக்கு மயக்க மருந்து செலுத்தி, மருத்துவ சிகிக்சை அளித்தனர்.  இதைத்தொடர்ந்து ஞாயிறன்று அடர்ந்த வனப்பகுதியில்  அந்த புலி விடுவிக்கப்பட்டது. புலியின் நடமாட்டம் குறித்து  தொடர்ந்து ஒரு மாதம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப் படும். மேலும், நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதா? என ஆய்வு  செய்வதற்காக புலியின் உடலிலிருந்து ரத்த மாதிரிகள் சேக ரிக்கப்பட்டு, ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு ஆய்வு செய்து  வருவதாகவும் ராமசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.