districts

img

பாஜக அரசின் கொலைவெறி ஆட்டத்திற்கு விவசாயி பலி

நாமக்கல், பிப்.23- தில்லியில் விவசாயிகள் மீதான காட்டு மிராண்டித்தனமான தாக்குதலை கண் டித்து, திருச்செங்கோட்டில் ஐக்கிய விவசாயி கள் முன்னணி மற்றும் தொழிற்சங்க கூட்ட மைப்பினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பஞ்சாப், அரியானா எல்லையில் விவசா யிகள் போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட துப் பாக்கி சூட்டில் 24 வயது இளம் விவசாயி உயிரி ழந்தார்; மற்றும் 15 விவசாயிகள் படுகாயம் அடைந்துள்ளனர். ஒன்றிய அரசின் இந்த கொலைவெறி ஆட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் அனைத்து மத்திய தொழிற்சங்கங் களும், ஐக்கிய விவசாயிகள் முன்னணியும் இணைந்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டங் கள் நடைபெற்று வருகின்றன. இதன்ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு அண்ணா சிலை அருகே, ஐக்கிய விவ சாயிகள் முன்னணியின் மாவட்டத் தலை வர் ஏ.ஆதிநாராயணன் தலைமையில் கருப் புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க (சிபிஐ) மாவட் டத் தலைவர் அன்புமணி, மாவட்டச் செயலா ளர் செல்வராஜ், ஏஐடியுசி மாவட்டச் செய லாளர் தனசேகரன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் இ.ஜெயராமன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் எஸ்.நல்லாகவுண்டர், உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவ சாய சங்கங்களின் கூட்டு இயக்க தலைவர் செல்லமுத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் கே.பூபதி, ஆர்.வேலா யுதம், பி.தங்கரத்தினம், மெளசி, பூபதி, பால்  உற்பத்தியாளர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ஆர்.முத்துசாமி, சிஐடியு நிர்வாகி ஐ.ராயப் பன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஆர்.மனோ கரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி.பெருமாள் நிறை வுரையாற்றினார். இதில் திரளானோர் கலந்து கொண்டனர். தருமபுரி தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐ டியு மாநிலச் செயலாளர் சி.நாகராசன் தலைமை வகித்தார். இதில் சிஐடியு மாவட் டச் செயலாளர் பி.ஜீவா, எல்பிஎப் மாவட்டத் தலைவர் அன்புமணி, மாவட்டச் செயலாளர் சண்முகராஜா, ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் சிவலிங்கம், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் கே.மணி, ஏஐசிசிடியு மாவட்டச் செயலாளர் சி.முருகன், எச்எம்எஸ் மாவட் டச் செயலாளர் முருகானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.