தருமபுரி, பிப்.12- கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலை யில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் அப் பகுதி பொதுமக்கள், விவசாயிகள் பாதிப் பிற்குள்ளாகி வருகின்றனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கோபாலபுரம் கிராமத்தில் தியாகி சுப் பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையில் கடந்த ஜன.28 ஆம் தேதியன்று அரவைப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அரவை தொடங்கியதன் காரணமாக ஆலை யிலிருந்து கழிவுநீர், குழாய்கள் மூலம் விவ சாய நிலங்களில் வெளியேற்றப்பட்டு வருகி றது. இந்த கழிவுநீரினால் ஆலையின் கிழக்கு பகுதியில் உள்ள சுமார் 200 ஏக்கர் விவசாய நிலம் மற்றும் 20 கிணறுகள் ஏற்கனவே பாதிக் கப்பட்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக கடுமையான துர்நாற்றத்துடன், கருப்பு நிறத் தில் சாக்கடை போன்ற கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால் சுற்று வட்டார பகுதிக ளான கோபாலபுரம், ஜம்மனஹள்ளி கிராமத் தைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். துர் நாற்றம் காரணமாக ஒவ்வாமை ஏற்பட்டு வீடு களில் குடியிருக்கக் கூட முடியாத நிலை ஏற் பட்டுள்ளது. கழிவுநீர் கலந்த தண்ணீரை குடித்த கால்நடைகள் இறப்பதாகவும் விவ சாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த கழிவுநீரால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப் பட்டு, குடிக்க தகுதியில்லாத நிலை மாறி வருகிறது. எனவே, கழிவுநீர் வெளியேறு வதை தடுக்க மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு மென அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி யுள்ளனர்.