கோவை, பிப்.27- பள்ளி படிப்பை முடித்துவிட்டு, கல் லூரி சேரும் பள்ளி மாணவர்களின் விகி தம் 52 சதவிகிதத்தை எட்டியுள்ளது என கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன் பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித் தார். கோவை பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில், பள்ளிக்கல்வித்துறை சார் பில் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணாக்கர்களுக்கான கல் லூரிக்கனவு களப்பயணத்தை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகை யில், மாணவர்கள், இளைஞர்கள் அனை வரும் அனைத்து விதமான தகுதியை யும் பெற்று முன்னேறி, அனைத்திலும் முதலாவதாக வருவதற்கான நிலையை உருவாக்குவதுதான் நான் முதல்வன் திட்டத்தின் நோக்கம். அனைத்து இளை ஞர்களையும் கல்வியில், ஆராய்ச்சி யில், சிந்தனையில், செயலில், திறமை யில் சிறந்தவர்களாக மாற்றிட வேண் டும் என்கிற அந்த உணர்வோடு இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. பள் ளிப்படிப்பை முடித்து விட்டு கல்லூரி சேரும் மாணவர்களின் விகிதம் 52 சத விகிதத்தை எட்டியுள்ளது.
அதனை 100 சதவிகிதமாக அடைய பள்ளிக்கல்வித் துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதனை அடையும் வரை இத் திட்டம் தொடரும், என்றார். பெற்றோர்கள் நம் குழந்தைகளை, மற்ற குழந்தைகளோடு ஒப்பிடாதீர்கள். ஒவ்வொரு மாணவர்களுக்குள்ளேயும் ஒரு திறமை உள்ளது. அதனை கண்ட றிந்து, ஊக்கப்படுத்தினால் நிச்சயமாக பிற்காலத்தில் உயர்ந்த நிலையினை உங்கள் குழந்தைகள் அடைவார்கள். இதனை ஆசிரியர்களும், பெற்றோர் களும் இணைந்து செயல்பட்டு மாணவர் களின் எதிர்காலத்திற்கு ஊன்றுகோ லாக இருக்க வேண்டும். விடாமுயற்சி யோடும், ஆர்வத்தோடும் படித்தால் வெற்றி நிச்சயம், என்றார். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் பொது நூலக இயக்குநர் க.இளம்பகவத், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப், முதன்மை கல்வி அலுவலர் பூபதி, பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி செயலர் கண்ணையன், கல்லூரி முதல் வர் பிருந்தா, கல்லூரி கல்வி இணை இயக்குநர் கலைச்செல்வி உட்பட அர சுத்துறை அலுவலர்கள் கலந்து கொண் டனர்.