சேலம் மாவட்டம், சங்ககிரியில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா மற்றும் திமுக கூட்டணி கட்சியான கொமதேகவின் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பா ளர் மாதேஸ்வரன் அறிமுகக்கூட்டம் நடை பெற்றது. கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் மற்றும் சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான டி.எம்.செல்வகணபதி ஆகியோர் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து, அண்ணா, கலைஞர் ஆகியோரின் உருவப்படங்க ளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதனைத்தொடர்ந்து ஈ.ஆர்.ஈஸ்வரன் பேசுகையில், நாடாளுமன்ற தேர்தலில் இந் தியா கூட்டணி அமோக வெற்றி பெற்று, மத் தியில் ஆட்சி அமைக்கும். சேலம் நாடாளு மன்ற தொகுதி வேட்பாளராக போட்டியி டும் டி.எம்.செல்வகணபதி அமோக வெற்றி பெற்று, ஒன்றிய அமைச்சராக அங்கம் வகிப்பார், என்றார். இதன்பின் சேலம் தொகுதி வேட்பாளர் டி.எம்.செல்வகண பதி பேசுகையில், “என் மண் என் மக்கள்” என விளம்பரம் செய்து கொண்டு வரும் பாஜக, தமிழக மக்கள் வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட போது திரும்பிக்கூட பார்க்கவில்லை. தமிழகத்திலிருந்து அதிக ளவில் வரியை பெற்றுக்கொள்ளும் ஒன் றிய பாஜக அரசு, தமிழ்நாட்டிற்கு எந்த திட் டத்தையும் கொண்டு வரவில்லை எனக் குற் றஞ்சாட்டினார். தொடர்ந்து நாமக்கல் தொகுதி வேட்பாளர் மாதேஸ்வரன், இந் தியா கூட்டணியில் உள்ள சீட்டுகள் அனைத் தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீட்டு என வும், மற்றவைகள் அனைத்தும் வெத்து சீட்டுகள் எனவும் தெரிவித்தார். இக்கூட்டத்தில், சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் எஸ்.கே.சேகர், ஏ.ஆறு முகம், சங்ககிரி ஒன்றிய திமுக செயலாளர் ராஜேஷ், திமுக மாவட்ட அவைத்தலை வர் தங்கமுத்து, மாவட்ட துணைச்செயலா ளர் சுந்தரம், கொமதேக மாவட்டச் செயலா ளர் ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண் டனர்.