கோவை, நவ. 15 – கோவை தொண்டா முத்தூர் பகுதியில் பிடி பட்ட 16 அடி நீளமுள்ள ராஜநாகம். வனப்பகுதிக் குள் கொண்டு சென்று விடப் பட்டது. கோவை தொண்டா முத்தூர் அடுத்த நரசிபுரம் பகுதி மேற்கு தொடர்ச்சி மலைஅடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்நிலை யில் வியாழனன்று மாலை வனப்பகுதி ஒட்டியுள்ள தினேஷ்குமார் என்பவ ருக்கு சொந்தமான தோட்டத்தில் நீளமான அரியவகை பாம்பு உள்ளதாக வனத் துறையினர் மற்றும் பாம்பு பிடிப்ப வர்க்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பாம்பு பிடிப் பதில் கைதேர்ந்தவரான சந்தோஷ் குமார் தனது குழுவினர் வந்து பாம்பு பிடிக்கும் பணியில் ஈடுப்பட்டனர். அப் போது தோட்டத்தில் அமைந்துள்ள வீட்டின் அருகே பாம்பு இருப்பதை பார்த்த குழுவினர் உடனடியாக பாம்பை வெளியே கொண்டு வந்தனர். இதில் அப்பகுதியில் இருந்த பாம்பு 16 அடி நீளமுள்ள ராஜநாகம் என தெரிய வந்தது. சந்தோஷ் குமார் மிக கவன மாகவும், பாம்பை பத்திரமாக பிடித்து சாக்கு பையில் போட்டு போளுவம்பட்டி வனத்துறையினர் உதவியுடன் வைதேகி நீர் வீழ்ச்சி பகுதியான அடர்ந்த வனத்தில் விடப்பட்டது. மேலும் 16 அடி நீளமுள்ள இந்த ராஜ நாகத்தை லாவகரமாக கையாண்ட சந்தோஷ்குமார் வனத்துறை யினர் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.